பக்கம்:கலைமணி பாஸ்கரத் தொண்டைமான் கலைக் களஞ்சியம்.pdf/201

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைக் களஞ்சியம் 199

வருணனைக்கு அப்பாற்பட்ட ஆழந்த கல்வியுடையவர்கள், கூர்த்த மதியில் தமக்கு இணையில்லாதவர்கள், கூடி சிரித்த முகத்தோடு சிந்தித்துப் பேசி மகிழும்போது அந்த இடம் இந்திரன் உறையும் தேவலோகத்தையும் தோற்கடித்து விடுகிறது.

அன்றைய நிகழ்ச்சியும் அங்கே தேவலோகத்தைக் கொண்டு வந்ததாக, கூடியிருந்தவர்கள் உணர்ந்திருக்கலாம். அதை அமைத்த டி.கே.சி வட்டத்தொட்டியின் அமைப்பாளரும் தொ.மு.பாவின் அருமைப் புதல்வியுமான திருமதி ராஜேஸ்வரி நடராஜனுக்கும் அவருடைய குடும்பத்தினருக்கும் இலக்கிய உலகம் நன்றி பாராட்ட வேண்டும்.

வீரபத்ரன் கிருஷ்ணாபுரம் கோயில் சிற்பம்