கலைவாணன்
115
மேலாக நேசிக்கும்போது என்னை நீங்கிப் பிரிந்துபோக நினைப்பது தர்மமா?
(ஒரு காவலன் வந்து வணங்குகிறான்.) சேவகன்:- அரசே! முரணை நகரிலிருந்து ஒரு புலவரும் சில வீரர்களும் தங்களைக் காண வந்திருக்கிறார்கள். குலோத்து:- சரி, நீ போய் அவர்களை உடனே தக்க
மரியாதையுடன் இங்கு அழைத்துவா.
(காவலன் வணங்கிச் செல்கிறான்.) முரணை நகரிலிருந்து......! என்ன காரணமாயிருக்கும்? உதயணர்:- உடன் வீரர்களும் வந்திருப்பதால், அரசரே
அனுப்பியிருக்கலாம். - கூத்தர்:- எல்லாம் சற்று நேரத்தில் தெரிந்துவிடுகிறது. (புலவரும் வீரர்களும் வந்து வணங்குகின்றர்கள்.) புலவரும் வீரரும்:- அரசே வணக்கம்.
குலோத்து:- வணக்கம். வாருங்கள்; வாருங்கள்; அதோ அப்படி அமருங்கள்-உம்.-தாங்கள் முரணை நகரி லிருந்து வந்த புலவரோ?
புலவர்:- ஆம். எம் அரசர் தங்களுக்கும் புகழேந்திப் புலவ ருக்கும் இரு ஒலைச்சுருள்கள் கொடுத்து அனுப்பி
யுள்ளார்.
(ஒலைச்சுருளைக் கொடுக்க, குலோத்துங்கன்
வாங்குகிறான்.) குலோத்து:- அப்படியா! மிக்க மகிழ்ச்சி...... ! உம். தங்கள்
பெயர்...?
புலவர்:- என்னைக் குணசீலர் என்றழைப்பார்கள். இவ்வீரர்
களை வழித்துணைக்காக உடன் அனுப்பி வைத்தார். குலோத்து :- உங்கள் அரசரும் அரசியும் மற்றும் குடிமக்கள்
அனைவரும் நலம்தான்ே?