கலைவாணன்
121
குணவதி:- உம். நீங்கள்கூடத்தான்் நன்றாகப் பாடுகிறீர்கள். குலோத்:- உண்மையாகவா? குணவதி:- உண்மையாகத்தான்் சொல்லுகிறேன்.
குலோத் இல்லை; குமுதா! நீ.........
குமுதம்: ஆமாம்; மகாராஜா இவ்வளவு அழகாகப் பாடுவா
ரென்று நான் நினைத்ததே இல்லை.
குணவதி:- பார்த்தீர்களா? உங்கள் பாட்டைக் கேட்டுக்
குமுதம்கூட ஆச்சரியப்படுகிறாள்!
குலோத்:- என் பாட்டு அவ்வளவு நன்றாயிருக்கு மென்று எனக்கு நம்பிக்கையில்லை. அப்படி இருந்தாலும் அதற்குக் காரணம் நீயாகத்தான்் இருக்க வேண்டும்.
குணவதி:- இல்லை; குமுதா, இதெல்லாம் வீண் பேச்சு. அன்றைக்குக்கூட மகாராஜா முன்பே நன்றாகப்பாடுவா ரென்று யாரோ சொல்லவில்லை? -
குமுதம்:- யார் சொன்னது? எனக்குச் சரியாக நினை
வில்லையே!
குணவதி:- (கண்ணைக் காட்டி) ஆமாமென்று சொல்லேண்டி.
குலோத்: என்ன குணவதி, என்னைப் புரளி செய்கிறாய்
போலிருக்கிறதே!
குணவதி:- இல்லை; இல்லை. நான் தங்களைப் புரளி செய் வேனோ? யாரோ அப்படிச் சொன்னதாக ஞாபகம். உம். அதிருக்கட்டும். முரணை நகர் சென்ற நமது புலவரைப் பற்றிய செய்தி ஏதேனும் வந்ததா? சில நாட் களில் வந்து விடுவதாகச் சென்றவர் ஏன் இன்னும் வர வில்லை? - -