இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
124
கலைவாணன்
குலோத்:- ஏன்?
குணவதி:- அவர் இயற்றிய நூலை நாம் கேட்டு மகிழ
வேண்டாமா!
குலோத்: ஆம். விரைவில் அழைத்து வர ஏற்பாடு செய்
கிறேன். போதுமா?
குணவதி:- பேச்சில் பொழுது போனதுகூடத் தெரியவில்லை.
நிலவுகூட எழுந்து விட்டதே!
குலோத்:- ஆமாம். அதுதான்் குறைவாயிருந்தது. இப்போது
அந்தக் குறையும் இல்லை!
குணவதி:- தாங்கள் என்ன சொல்லுகிறீர்கள்?
குலோத்து:- உண்மையைத்தான்் சொல்லுகிறேன். அதோ பார் எழில் நிறைந்த புது மலர்கள் நிறைந்த சோலை, மலர்களின் நறுமணத்தை வாரிக்கொண்டு மிதந்து வரும் தென்றல், மதுவின் இன்பத்தில் மகிழ்ந்த வண்டினங் களின் இனிய இசை, மயில்களின் ஆடல்; இவைகளுக் கெல்லாம் இடையே இருக்கும் நமக்குச் சந்திரன் இல்லா திருந்தது குறையல்லவா?
(குணவதி நாணித் தலைகவிழ குலோத்துங்கன் பாடுகிறான்) (திரை)