48
கலைவாணன்
குணவதி முதலியோர் பிராயணத்துக்குத் தயாராகி விட்டார்களா வென்று பார்த்துவா!
ஏவலாள்:- உத்தரவு,
பாண்டியன்:- அமைச்சரே! குறிப்பிட்ட நேரம் நெருங்கி விட்டது. நீங்கள் முன்னதாகப் போய் யானை, குதிரை, ஒட்டை, ரதம், சிவிங்கிகள் முதலியவைகளை அணி வகுத்துத் திட்டம் செய்யுங்கள். இதோ நானும் புலவரும், குணவதி முதலிய எல்லோரையும் அழைத்து வருகிறோம்.
மதிவாணர்:- அப்படியே ஆகட்டும்.
(குணவதியின் தோழி குமுதம் வருகிறாள்.)
பாண்டியன்:- என்ன குமுதா! அங்கே எல்லோரும் புறப்படத் தயார்தானே?
குமுதா:- ஆம்; எல்லாம் தயார்தான்....ஆனால்!......
பாண்டியன்:- ஆனாலென்ன குமுதா?
குமுதா:- இன்று காலையிலிருந்தே மகாராணியும் இளவரசியும் அழுதுகொண்டே இருக்கிறார்கள். நாங்கள் எவ்வளவு தேற்றியும்......
பாண்டியன்:- என்ன அழுகிறார்களா! ஏன் அழவேண்டும்?... ...உம்!....சரி...நீ போய் அவர்களை இங்கே அழைத்துவா.
குமுதா:- உத்தரவு.
பாண்டியன்:- பேதைகள் இந்தப் பெண்களின் குணமே இப்படித்தான். எப்போது துக்கப்படவேண்டும்; எப்போது மகிழ்ச்சியடைய வேண்டும் என்ற வித்தியாசம் கூடத் தெரிவதில்லை.