52
கலைவாணன்
னாக்கிவிடாதே! புலவரின் நிரந்தரப் பிரிவை என்னால் சகிக்க முடியா தென்பதையும் நீ மறந்துவிடாதே.
(எல்லோரும் மெளனத்திலிருக்கிறார்கள். குலோத்துங்கனும் மதிவாணரும் வருகிறார்கள்.)
குலோத்:- அரசே வணக்கம்:
(யாவரும் தூக்கத்திலிருந்து விழித்தவர்களைப் போல் திடுக்கிட்டு உணர்வு வரப்பெறுகின்றனர். குலோத்துங்கனைக் கண்ட குணவதி மான் குட்டியைப் போல் நாணத்தோடு ஓடி மறைகிறாள். மகாராணியும் சென்று விடுகிறாள்.)
பாண்டியன்:- வாருங்கள்! வாருங்கள் உம், அதிகத் தாமதமாகி விட்டதோ?
குலோத்:- இல்லை; தருணம்தான்.
பாண்டியன்:- இதோ புறப்பட வேண்டியதுதான். உம். குமுதம்! நீ சீக்கிரம் போய் குணவதியைப் பிரயாணத்திற்குச் சித்தப்படுத்தி இங்கு அழைத்துவா.
குமுதம்:- உத்தரவு.
பாண்டியன்:- மதிவாணரே, மற்ற ஏற்பாடுகள் எல்லாம் முடிந்து விட்டனவல்லவா?
மதிவாணர்:- ஆம். எல்லா ஏற்பாடுகளும் முடிந்தன. புறப்பட வேண்டியதுதான்.
(குமுதம் குணவதியை அழைத்து வருகிறாள். மகாராணியும் வருகிறாள்.)
புகழேந்தி:- குணவதி! அன்னை, தந்தை, மற்றுமுள்ள பெரியோர்கள் எல்லோரையும் வணங்கிக்கொள்.