இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
86
கலைவாணன்
எல்லோரும்:- ஆமாம்; ஆமாம். (எல்லோரும் ஆரவாரம்
செய்கின்றனர், இரு காவலர்கள் வருகின்றனர்.)
காவலன்: (அதிகாரத்துடன் அதட்டி) உஸ்......என்ன இங்கே
சத்தம்? எல்லோரும்(வாருங்கள் இங்கே. -
விகடகவி. எங்கே!
காவலன்:- துர்க்கை ஆலயத்திற்கு. உம்; புறப்படுங்கள்!
விகடகவி. எங்களை அங்கே கூட்டிக்கொண்டு போய்
என்னப்பா செய்யப்போகிறீர்கள்!
காவலன்:- எங்க புலவர் கேக்கும் கேள்விக்குப் பதில் சொன்னா விட்டுடுவோம். சொல்லாவிட்டா தலையை மட்டும் தனியா எடுத்துடுவோம்.
விகடகவி:- உம்!....அப்படியா! கேள்விக்குச் சரியான பதில் சொல்லிவிட்டால் உங்கள் புலவரின் தலையை வெட்டி விடுவீர்களோ!
காவலன்:- எங்கள் புலவர் தலையை வெட்டுவதா சரிதான்். ஆளைப் பாருடா!...எங்க புலவரு தலையே இவரு வெட்டிப்புடுவாராம். இவரு! உம்...உ.ம். சரிதான்் வாங்கையா. -
(எல்லோரும் போகிறார்கள்.)
(திரை)