கலைவாணன்
89
எங்கே இதற்குப் பதில் சொல்வாய். உன் கவித் திறத்தையும் பார்ப்போம்! அம்பட்டன்:
"கண் பொட்டையாயினும் அம்பட்டன் கான் கவிவாணர்
முன்னே.
பண்பட்ட செந்தமிழ் நீயுங் திடுக்கிடப் பாடுவனே'
(மறுபடியும் புலவர்கள் நகைக்கின்றனர். அரசன்
கூத்தரைப் பார்த்து திகைக்கிறார்)
கூத்தர்: வாயாடி, கண்ணற்ற குருடனுக்குத் திமிரைப் பார்! யாரங்கே? இவனையும் அப்படி இழுத்து நிறுத்து. (காவலன் அவனையும் இழுத்து நிறுத்துகிறான்.)
கூத்தர்:. (மூன்றாவது நின்றவனை நோக்கி) உம். என்ன!
நீயும் புலவன்தான்ோ?
கொல்லன்:
'செல்வன் புதல்வன் திருவேங்கடவன் செகத்குருவாம் கொல்லன் கவியைக் குறைசொன்ன பேரைக் குறடு
கொண்டு
பல்லைப் பிடுங்கிப் பருந்தாட்டமாடிப் பகைவர் முன்னே அல்லும் பகலும் அடிப்பேன் கவியிருப்பாணி கொண்டே' (மறுபடியும் யாவரும் சிரிக்கின்றனர்.)
கூத்தர்:- (சினத்துடன்) சே! மடையன், யாரென்று கேட்டால் ஜாதித் தொழிலைக் காட்டுகிறான். போ இப்படி.
(கொல்லனை இழுத்துத் தள்ளச் செய்கிறார்.) கூத்தர்:- (வண்ணானை நோக்கி) நீ பார்?.
வண்ணான்:- (மேலும் கேள்வி கேட்கவிடாமல் விரைந்து
பதிலளிக்கிறான்.)