பக்கம்:கல்கி முதல் அகிலன் வரை.pdf/126

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

முறையையும் சொல்லிக் கொடுத்துச் சாகசம் பல புரிந்தாரே, அதற்காகவா?-அல்ல!

‘போக்கிரி ஒருவனின் கடைசிப் பட்சமான அடைக்கலம் அரசியலாகும்’ என்று சொல்லியிருக்கிறார்கள். ஓலை, இலச்சினை, போர்க்கொடி, தாடி மீசை, சிறை, கள்ளவிழி கள்ளவழி-இப்படியான உபாயங்கள் ராஜாராணிக் கதைகளுக்குச் சொந்தம். இதற்கு எந்தப் பட்டயமும் கல்வெட்டும், மெய்க்கீர்த்தியும் உரிமை தரவேண்டு மென்பது இல்லை! -

‘ஆனால், என் இலக்கியத்திறனாய்வுக் கண்னோட்டத்தில் குலோத்துங்கன் கதைத்தலைவனாக ‘இலக்கிய அந்தஸ்து’ பெறுகிறானென்றால், அதற்கு அவனது அழுத்தமான குணச்சித்திரமே காரணமாகும்.

“A historical romance must engender reflection and provoke thought!...The mental pictures it create must be indelible”-சரித்திரப் பேராசிரியர் திரு கே. வி. ரங்கசாமி ஐயங்கார் ‘சிவகாமியின் சபத’த்தில் வரம்பறுத்துள்ள குறிப்புக்கள் இவை.

ஓர் அற்புதமான கட்டம்:

கலிங்கன் அனந்தவர்மனின் திறைப்பொருள் செலுத்தும் பணியை பூவை ஒருத்தி ஏற்று வந்து நிற்கிறாள். பிறகு “புதுமையான முறையில் என்னைத் திறைப்பொருளாக அனுப்பி வைத்திருக்கிறார், புவனேஸ்வரா!” என்கிறாள்,

திறைப் பொருளுக்குத் தனித்த பெருமை ஏதேனும் இருக்கவேண்டுமென்று எதிர்பார்ப்பது இயல்பு. மன்னர் சோதனை செய்கிறார் சோதனையில் வெற்றியடைகிறாள் அந்தப்பாவை.

124