பக்கம்:கல்கி முதல் அகிலன் வரை.pdf/127

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



ஏழிசையின் சங்கமத் தூண்டுதலினால் மெய்ம்மறந்த இசைமன்னன், “திரிபுவனேசுவரா, தாங்கள்தான் என் குருநாதர்! தாங்கள் வகுத்த இசையைப் பயின்றே நான் வாணி ஆனேன்!” என்று கூறியதைக் கேட்டு மேலும் பூரிப்படைகிறார். கருணாகரன்-அருள்மொழி காதலைப் பற்றி அறிவார் அவர். ஆனால் அவர்களது காதல் வளர்ந்தால், கருணாகரனால் பூர்த்திபெறவேண்டிய தேவியின் மனத்தேர் அச்சுமுறிந்து போய்விடுமென்பதையும் அறிவார் அவர். அது மட்டுமல்ல; தம் ராணியின் மனக் குறிக்கோளின்படி, கருணாகரனுக்கு உரியவள் அம்மங்கை என்பதையும் அவர் மறந்திட மாட்டார்! மேலும், வந்தவள் ‘சூது’ என்பதும் அவர் அறியாப் புதிரன்று. இருந்தும், அவரே சூதாக மாறி, தம்மையே அவள்பால் இழக்கின்றார். ஏழிசை வல்லபிக்கு இளைய தேவியாகும் அதிர்ஷ்டம் கிடைக்கிறது. அந்த அதிர்ஷ்டத்தின் நல்ல பயன்தானோ என்னவோ, சோழர்பிரான் நாயக பிரானகிறார். தமிழ்ச் சரித்திரப் புதின உலகிற்கு ஒரே ஒரு வழிகாட்டியாகத் திகழும் பொற்புமிகுந்த கல்கி அவர்களின் மாமல்லச் சக்கரவர்த்தி, புலிகேசி, பொன்னியின் செல்வன் ஆகியோரின் குணச்சித்திரப் பிடிப்புக்கு ஈடுகொடுத்து நிற்க குலோத்துங்கனாலும் முடியுமென்பதற்குச் சாட்சியமாக அமைந்துள்ள கட்டமும் இதுவேதான்!

கதைக்குத் தலைவி ஒருத்தி வேண்டும். அந்த வாய்ப்பு இளவரசி அழகிய மணவாளனி அம்மங்கைக்குக் கிடைத்திருக்க வேண்டும். இளவரசியை வைத்துக்கொண்டு. அற்புதங்கள் செய்திருக்கலாம். ஆனால் ஆசிரியர் தவறி விட்டார். பதவி மறந்து, பண்பு அறிந்து காதலிக்க பரிபக்குவம் பெற்ற அம்மங்கையின் ஓவியம் நீர்பட்ட

125