பக்கம்:கல்கி முதல் அகிலன் வரை.pdf/128

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



மூவர்ணச் சித்திரமாகிவிட்டது. பெரிதாகக் காதல் ரகசியம் பேசுவதாக எண்ணி நான் ஏமாந்துவிட்டேன்! தலைவிப் பதவி மதுராந்தகி தேவியாருக்கே கிடைக்க வேண்டும். “இன்றுமுதல் கருணாகரன் என்னால் தத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட மகன்!” என்று கூறும் அந்த ஒரு வாய் மொழியில் வாழ்கிறாள் அந்தத் தாய். தியாகத்தில் பிறந்த தியாகமன்றோ அது!

அருமைமிகு நண்பர் திரு கோவி. மணிசேகரன் சரித்திரத்தில் வாழ்பவர்.

மறைவுச் சூழ்ச்சிகள், தாமாகவே உருப்பெறல் வேண்டும். இங்கே, ஆசிரியர் பக்கத்திற்குப் பக்கம் சொந்தக் குரல் கொடுத்திருக்கிறார்!

முதற் குலோத்துங்கன் சோழமா காவியத்தில் சக்கவர்த்தியாக வாழ்கிறான்; புலவரேறு செயங்கொண்டார் நாக்கினில் அறிஞர் என வாழ்கிறான்; ‘செம்பியன் செல்வி’யில் கடிகமணியாக வாழ்கின்றான்!

126