பக்கம்:கல்கி முதல் அகிலன் வரை.pdf/22

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



லலிதா கெட்டிக்காரி. சீதாவின் அந்தரங்கத்தை அறிந்துகொண்டு அவளது எதிர்காலக் காதலனைப் பற்றியும், அவள் திருமணத்தைப் பற்றியும் அவள் வாய் மொழியாகவே சொல்லச் செய்கிறாள்.

சீதா பேசுகிறாள்: “... அம்மா சொன்னலும் சரி; அப்பா சொன்னலும் சரி; அவர்கள் விருப்பப்படி நான் கல்யாணம் பண்ணிக்கொள்ளச் சம்மதிக்கமாட்டேன். எனக்குப் பிரியம் இருந்தால்தான் சம்மதிப்பேன். என்னைக் கல்யாணம் செய்துகொள்ளுகிறேன் என்று ஒருவன் வந்தால் உடனே ‘சரி’ என்று சொல்லிவிடுவேனா? ஒரு நாளும் மாட்டேன்!...” என்று தொடங்கி முடிக்கும்போது அவள் தன் இதயக் கனவுகளை தெள்ளத்தெளிய லலிதாவுக்கு மட்டுமல்லாமல், நமக்கும் சொல்லிவிடுகிறாள். இந்தக் கட்டம் அவளது குணத்துக்கு -குணசித்திரத்துக்கு (characterisation) ஓர் ஆரம்ப அடிப்படை.

தேவதரிசனமோ?

மாப்பிள்ளளை வந்துவிட்டான்!

மணப்பெண் கோலம் ஏந்தி, கையில் வெற்றிலை பாக்குத்தட்டும் ஏந்தி, தழையத்தழையக் கட்டிய புடவையுடனும், செழிக்கச் செழிக்கக் கட்டிய மனக்கோட்டையுடனும் லலிதா வருகிறாள். அவளது வற்புறுத்தலின் பேரில், அவள் தோழி சீதாவும் அவளைப் பின்பற்றுகிறாள்.

குனிந்த தலை நிமிராமல் லலிதா வருகின்றாள்.

20