பக்கம்:கல்கி முதல் அகிலன் வரை.pdf/37

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



சீதைக்குக் கண்காணாத கடவுளும் கண்கண்ட காந்தியுமே இப்போது ராஜ்யமாக இருந்தன.

தனக்கு இனிக் கணவன்தான் அனைத்தும் எனச் சீதாவும், இனிமேல் தனக்கு மனைவிதான் அனைத்தும் என ராகவனும் ஒருமுறை மனம்திருந்தி, அந்த மாற்றத்துக்கு வழிபிறப்பதற்குள், கதையைத் திசைதிருப்பப் பிறந்துவிட்ட பல நிகழ்ச்சிகளையும் மறந்துவிட்டு, உச்சக் கட்டத்தை எண்ணுகிறேன்.

இப்போது, ராகவன் சமூக சேவகன்.

ஹவ்ராவில் நடந்த வகுப்புவாதக் கலவரத்தில் சிக்கித் தவித்தவர்கள் அனைவரையும் சுட்டிக்காத்தான் அவன்.

விவரம் அறிந்த சீதா பெருமகிழ்வு பூக்கிறாள்.

மறுபடி சீதா - ராகவன் குடும்பவாழ்வில் புதிய மணம். பஞ்சாப் நகரவாழ்வு சொர்க்கம்! காந்தி அடிகளின் ஆத்ம சக்தி வெல்கிறது. நாடு சுதந்திரம் அடைகிறது.

ஹொஹங்காபாத்தில் ஏற்பட்ட கலவரத்தில் சிதாவைக் காப்பாற்றிய மெளல்வி சாகிப் உருவத்தில் இருந்த தன் தந்தையின் உண்மைப் பாசம் கண்டும் தாரிணியின் பிறப்பின் ரகசியம் கண்டும் சீதா ஆனந்தக் கண்ணிர் வடித்து, அது உலர்வதற்குள், சீதாவுக்குத் தண்ணிரில் தஞ்சம் கிடைக்கிறது. அலைஓசை-மரணபயம்!...

ஆனால் அவள் பிழைத்தாள்!

ராகவனோ, சீதா செத்துவிட்டதாக நம்பிவிட்டான்! சூர்யா அரங்கேற்றிய நாடகம் இது!

35