பக்கம்:கல்யாணம் இன்பம் கொடுப்பதா-இன்பத்தைக் கெடுப்பதா.pdf/8

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஒரு பெண் இருக்கிறாள் அவள் கணவன் அவனுக்கு ஏற்றவன்.அழகன். 'கலவி மதனைப் போலே குலவி' முத்தம் தந்து இன்பமளித்து இன்பம் பெறுபவன்.சில வருஷங்கள் இனிமையாகக் கழிகின்றன.அவள் பார்வையில் வேறொருவன் படுகின்றான். காந்தமாகத் திகழ்கிறான்.அவள் கால் கட்டை விரலையே பார்க்கும் பத்தினியாக இருப்பதில்லை. சமயம் கிடைத்தால் அவனுடன் ஓடிப் போகவும் தயாராகிறாள்.ஏன்?

 மனதுக்கு உகந்த அழகிய பெண்ணை காதலித்து கல்யாணம் செய்து வாழ்விலே சொர்க்க இனிமை கண்டு வரும் ஆண் திடீரென வேறு மலர் மீது  தாவும் வண்டாகிறான். தொழிற் காரியைத் தேடித் திரிகிறான். மனைவியிடமும் அன்பாக இருக்கிறான். அது ஏன்?
 காதலித்து தம்பதிகளான ஜோடி மனம் பிணங்கிப் பிரிந்து இஷ்டம் போல் அலைவதும் சகஜமாக இருக்கிறது நாட்டிலே. ஏன் ?
 எங்கோ இருந்த அவளையும் எப்படி யெப்படியோ வாழ்கிற அவனையும் பெற்றோர்கள் சேர்த்து வைக்க, அறிமுகமற்ற அந்தப்பெண்ணும் ஆணும் ஒன்றுபட்டுச் சுமுகமாக வாழ்வுப்பாதையில் வெற்றிகரமாக முன்னேறுகிறார்கள். இப்படி இன்ப வாழ்வு வாழும் பலரையும் காணமுடிகிறது. இது எப்படி சாத்திய மாயிற்று?
 இவையும் இவை போன்ற எண்ணிலாப் பிரச்னைகளும் இருக்கின்றன ஆராயத்துணிகிறவர்களுக்கு. ஆராய்ச்சிக்கு உரிய சுவையான விஷயங்கள் தான் இவை. இவற்றின் அடிப்படை, மனோதத்துவம், செக்ஸ் ஈடுபாடு, மனித குணப் பண்பாடுகள் ஆகியவைதான்.