பக்கம்:கல்யாணராமனும் பரசுராமனும்.pdf/31

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2. stougosni-u si-sisir элфёз, பாடல் ?Ꮾ இவ்வாறான பொருள்களின் தோற்றங்கள் அசைவுகள், அவைகளுடைய அத்தகைய தோற்றங்கள் அசைவுகளோடு நின்று விடுவதில்லை. அவைகள் அதற்குரிய காலத்திற்கு நிலைபெற்று இருப்பு கொண்டு) பின்னர் தன் நிலையிலிருந்து அதாவது தனது பழைய நிலையிருந்து நீங்கி அதன் புதிய நிலைக்குச் சென்று விடுகின்றன. பொருள்களின் அதாவது உலகம் அனைத்தின் இத்தகைய தோற்றமும் (ஆக்கல் - படைத்தல்) நிலைபெறுதலும் நீக்கலும் இடைவிடாமல் நிகழ்ந்த கொண்டிருக்கின்றன. இதை படைத்தல், காத்தல் அழித்தல் என்றும் சாத்திரங்கள் குறிப்பிடுகின்றன. இதில் அழித்தல் என்னும் சொல்லுக்குப் பதிலாக கம்பன் நீக்கல் என்னும் சொல்லைப் பயன்படுத்தியுள்ளார். அது சிறப்பாகும். ஏன் என்றால் உலகில் எந்த பொருளும் அழிவதில்லை. அதன் பழைய நிலை நீங்கி புதிய நிலை ஏற்படுகிறது. பழையன கழிதலும் புதியன புகுதலும் என்று கூறப்பட்டிருக்கிறதே தவிர, பழையன அழிதலும், புதியன வருதலும் என்று கூறப்படவில்லை. எனவே கம்பனுடைய கருத்தும் சொல்லும் மிகவும் துல்லியமானதாகவும் மிகச் சரியானதாகவும் அமைந்திருக்கிறது. அந்த முத்தொழில்களையும் பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மூன்று தெய்வாம்சங்களும் இடைவிடாது நிறைவேற்றிக் கொண்டிருக்கின்றன. இந்த முத்தொழிலுக்கும் தலைமையாக யூரீமன் நாராயணமூர்த்தி - திருமால் விளங்குகிறார். அவர் அனைவருக்கும் அனைத்திற்கும் தலைவர். அத்தலைவரிடம் நாங்கள் சரணடைகிறோம். அத்தலைவரை வணங்குகிறோம் என்று கம்பன் குறிப்பிடுகிறார். இங்கு சரணடைவது என்பது முற்றிலுமாக, மனம் வாக்கு காயத்துடன் முழுமையாக நாம் அந்த மூல சக்தியுடன் இரண்டர ஒன்றாகக் கலந்து விடுகிறோம் என்பதாகும். அந்தத் தலைவன் எல்லாப் பொருள்களிலும் தான் படைத்த அனைத்துப் பொருள்களிலும் இருக்கிறார். சர்வம் விஷ்ணுமயம் ஜகத். எனவே பிறப்புகளில் தோற்றங்களில் பேதமில்லை. அந்த பேதமற்ற