பக்கம்:கல்யாணராமனும் பரசுராமனும்.pdf/54

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கல்யாணாமனும் பரசுராமனும்-அ. சீனிவாசன் 51 நான்காவதாக ஆங்கிலேயர் படையெடுப்புகளும் அவர்கள் நடத்திய ஆக்கிரமிப்புப் போர்களும் கொள்ளைகளும் கொடுங்கோலாட்சியும் நமது நாகரீகத்தையும் நமது ஆன்மாவையும் சேதப்படுத்தியிருக்கிறது. இந்த அனுபவங்களிலிருந்த பாரதம் ஒரு புதிய ஆதர்சத்தைப் பெற்று விழிப்படைந்து வருகிறது. புத்தெழுச்சி பெற்று நடைபோடத் தொடங்கியிருக்கிறது. நமது நாட்டில் பிறந்துள்ள பல பெரியோர்கள் மகான்கள், அறிஞர்கள் நமக்கு வழிகாட்டி வருகிறார்கள். நமது இணையற்ற வீரர்கள் நமது நாட்டைத் தற்காத்து வருகிறார்கள். நமது நாட்டு மக்களிடையே நல்ல பல தொடர்புகளும் இணைப்புகளும் ஏற்பட்டு வருகின்றன. அதற்கு நமது இராமபிரானுடைய முன்னுதாரணம் நமக்கு ஆதர்சமாக அமைந்திருக்கிறது.