பக்கம்:கல்யாணராமனும் பரசுராமனும்.pdf/75

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

9. рлеот8fшеол. црі) - 72 எட்டாண்டுகளுக்கு மேல் பணியாற்றியுள்ளார். கட்சியின் சித்தாந்த ஏடான மார்கசீய ஒளி மாத இதழின் தலைமை ஆசிரியராக இருபது ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றியுள்ளார். எழுத்துப் பணிகளில் பத்திகை ஆசிரியராக இருந்த காலத்தில் கட்சி மற்றும் தொழிற் சங்கப் பத்திரிகைகளில் தொடர்ச்சியாகப் பல முக்கிய அரசியல், பொருளாதாரம், இலக்கியம் மற்றும் தத்துவ ஞானம் மற்றும் தொழிலாளர், விவசாயிகள் பற்றியப் பிரச்னைகள் பற்றிய பல கட்டுரைகள் எழுதி வந்ததுடன், அரசியல், வரலாறு, பொருளாதாரம், தத்துவஞானம், சர்வதேசப் பிரச்னைகள் முதலியவை பற்றிய பல தலைப்புகளிலான நூல்களை மொழி பெயர்ப்பு (தமிழாக்கம்) செய்தும், மூல நூல்கள் எழுதியும் அவை வெளியாகியுள்ளன. காரல் மார்க்ஸ் வாழ்க்கை வரலாறு, மார்க்சிய லெனினிய தத்துவ ஞானப் பிரச்னைகள் அரசியல் விஞ்ஞானத்தின் அடிப்படைகள், ஐக்கிய முன்னணித்தந்திரம், மார்க்சீய தத்துவம், வரலாற்றியல் பொருள் முதல் வாதம், மார்க்சியமும் பகவத் கீதையும் முதலியன அவர் தமிழாக்கம் செய்துள்ள முக்கியமான பெரிய நூல்களாகும். மற்றும் மார்க்சீய பொருளாதார தத்துவம், ஜீவாவின் தமிழ் பணிகள், கிராமப்புறப் பாட்டாளிகளை நோக்கி ஆகிய தலைப்புகளில் மூல நூல்கள் எழுதியுள்ளார். இந்த மூன்று நூல்களுக்கும் முறையே பேராசிரியர் வான மாமலை பேராசிரியர் சஞ்சீவி, பேராசிரியர் நா. தர்மராஜன் ஆகியோர் முன்னுரை எழுதி பாராட்டியுள்ளனர். இவ்வாறு திரு.அ.சீனிவாசன் அப்போது எழுதி வெளியான நூல்கள் சுமார் பதினேழாயிரம் பக்கங்களுக்கு மேலாகும். இவை திரு.அ.சீனிவாசன் அவர்களுடைய எழுத்துப் பணிகளில் அமைதியான சாதனையாகும். விருதுகள் திரு, அ. சீனிவாசன் தனது சிறந்த எழுத்துப் பணி சாதனைகளுக்காக சோவியத் நாடு நேரு விருதும், சிறந்த