பக்கம்:கல்வத்து நாயகம் (கவிதைகள்).pdf/14

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

30

கல்வத்து நாயகம்

பூமாந்தும் வண்டெனநும்
பொன்னருளைப் போற்றிநிதந்
தாமாந்தி நும்மலர்த்தாள்
சார்ந்திருக்க நாடாமல்
ஏமாந்த சேர்னகிரி
யென்றெவரு மேசவெறுங்
காமாந்த காரமுற்றேன்
கல்வத்து நாயகமே!

பாந்தமுற்ற மக்கள்மனை
பந்துசுற்ற மென்பவெலாஞ்
சாந்தமுற்ற மோன நிலை
தந்தருளற் கில்லையெனச்
சேந்தமுற்ற நும்மலர்த்தாள்
சேர்ந்திருக்க நாடுகின்றேன்
காந்தமுற்ற வூசியொத்துக்
கல்வத்து நாயகமே!

உள்ளளவு மென்னிதய
வுண்மையெலாம் நுஞ்சமுகம்
எள்ளளவும் வஞ்சமின்றி
யின்றிசைத்தே னேக்கமறக்
கொள்ளளவு மெய்யருளைக்
கூட்டுவிக்கக் கூர்ந்தெழுவீர்
கள்ளளவு நாயேற்குத்
கல்வத்து நாயகமே!

இன்னிசைப் பாமாலை

31


சீலமெலா மோருருவாய்ச்
சேர்ந்தெழுந்த சீரியர்சீர்
ஞாலமெலாம் போற்றுவது
நன்கறிந்தும் நாயடியேன்
தூலமெலாம் பூரிப்பச்
சொத்தைமனம் போம்வழியே
காலமெலாம் போகின்றேன்
கல்வத்து நாயகமே!

வேரிக்கு வாய்ந்தசூழல்
மின்னனையார் வெம்மயக்கிற்
பூரிக்கு நெஞ்சினர்க்கும்
பொன்னருள்தந் தாண்டீரே
பாரிக்கும் பல்பிணியிற்
பாடுபட்டுப் பாறுமகங்
காரிக்கும் பேரருள்வீர்
கல்வத்து நாயகமே!

பொய்விட்டார் நெஞ்சகத்திற்
போந்திருந்து நேர்ந்தவெலாம்
உய்விட்டுக் காத்துதவி
யொள்ளருள்தந் தாண்டீரே
மெய்விட்ட பாவியெனை
வேண்டாமல் வேறுதொதுக்கிக்
கைவிட்டா லென்செய்கேன்
கல்வத்து நாயகமே!