பக்கம்:கல்வியும் அரசாங்கமும், அண்ணாதுரை.pdf/4

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



கல்வியும் அரசாங்கமும்


பச்சையப்பன் கல்லூரி தமிழ்ப் பாராளுமன்ற பிரதமர் கூறியதாவது :–

"அயல் நாட்டிலிருந்து இப்பாராளு மன்றத்திற்கு பார்வையாளராக வந்திருக்கும் திரு. அண்ணாதுரை அவர்களுக்கு இந்த நாட்டின் பிரதம மந்திரி என்ற முறையில் அன்னாருக்கு "பெருந்தகை" என்ற பட்டத்தைச் சூட்டுகிறேன். என்று சொல்லியபின் அறிஞர் அண்ணா பேசியதாவது :–

தலைவர் அவர்களே | தோழர்களே | பாராளுமன்ற உறுப்பினர்களே,

இந்தப் பாராளுமன்ற நிகழ்ச்சியை நேரிலே காணவும் அதிலே பங்கு கொள்வதோடு என் கருத்தைத் தெரிவிக்கவும் சிந்தனை செய்யவும் வாய்ப்பளித்த உங்களுக்கு என் நன்றி. பெருந்தகை என்னும் பட்டத்தைக் கொடுத்து என்னைப் பெருமைப் படுத்திச் சிறப்பித்தமைக்கும் நன்றி செலுத்துகிறேன்.