பக்கம்:கல்வியும் அரசாங்கமும், அண்ணாதுரை.pdf/6

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

5

நடத்தப்போவதைப் பற்றி மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். உங்களைப் பாராட்டுகிறேன்.

எங்கன் காட்டிலே கல்வி நல்ல விதத்திலே பரவவில்லை. சர்க்கார் கல்வி நிலையங்களை ஏற்று நடத்துவதாய் இருந்தால் எங்கள் சர்க்கார் இலாப நஷ்ட கணக்கைப் பார்க்கும். எங்களுடைய நாட்டின் நிலைக்கு ஏற்றவாறு அதிகமான கல்வி நிலையங்கள் அங்கே ஏற்படவில்லை. கல்வி நிலையங்களில் பல, தனிப்பட்டவரிடம் ஒப்படைக்கப் பட்டிருக்கிறது.

பணப்பஞ்சத்தால் எங்கள் நாட்டில் கல்வி பரவாமல் இருக்கிறது. கல்வி நிலையங்களை அரசாங்கத்தார் ஏற்று நடத்துவதற்கு முன்னர் எதற்காக அப்படி நடத்துகிறோம் எத்தகைய திட்டத்தை நிறைவேற்றுவதற்காக நடத்துகிறோம் என்பதிலே அக்கரை இருக்கவேண்டும். எதையும் முறைப்படி, திட்டப்படி நடத்தவேண்டும், எத்தகைய முற்போக்கு சக்திக்கும் இடம் இருக்கவேண்டும்

மதச்சார்புள்ளவர்கள் நடத்தும் கல்வி நிலையங்களில் நீங்கள் நுழைந்ததும் என்ன காண்பீர்கள்? ஒரு பிள்ளையார், ஒரு சரஸ்வதி, காலை 8 மணிக்கு பஜனை, 10 மணிக்கு பாரதம், 12 மணிக்கு இராமாயணம், இராத்திரி அல்லி அரசாணி மாலை இப்படி அரசாங்கத்தார் கல்வி நிலையங்களை நடத்துமானால் இந்தப் படிப்பிலிருந்து தப்பித்துக் கொள்வதுதான் மனித சுதந்திரம்.

மதச்சார்புள்ள சர்க்கார் கல்வி நிலையங்களை ஏற்று நடத்துமானால் மனிதனின் சிந்தனாசக்திக்கு அங்கே இடமிருக்காது கல்வி எதற்காகக் கற்கிறோம்? பகுத்தறிவு பெற; புதிய பொருளைக்காண, கல்வி கற்கிறோம். நாட்டிலே நல்லறிவைப் பரப்பக்கூடிய கல்வி வேண்டும். இதற்காக புதிய திட்டங்களை வகுக்கவேண்டும்.