பக்கம்:கல்வி உளவியல்.pdf/268

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

246 கல்வி உளவியல் இரண்டாவது : மனித ஒத்துணர்வுக்குக் கற்பனை மிகவும் இன்றி யமையாது வேண்டற்பாலது. தம்மைப் பிறர்நிலையில் வைத்துப் பார்த்த லாலும், தொல்லையுறுவோர் நிலையிலும் துன்பக்கடலில் மூழ்கியுள்ளோர் நிலையிலும் தம்மை வைத்து கினைந்து பார்த்தலாலுமே பிறரை நன்கு அறிந்து கொள்ள முடிகின்றது. நம்மில் பலர் இவ்வாறு செய்ய இயலாத தளுல்தான் இன்று உலகில் இடுக்கண் நிறைந்திருக்கின்றது. மூன்ருவது : கற்பனை இன்ப வாழ்க்கைக்குச் சாதகமாகின்றது. எதிர்காலத்தை எண்ணி, நம்முடைய குறிக்கோள்கள், கனவுகள், விருப் பங்கள் ஆகியவை மகிழ்ச்சியுடன் கிறைவேறும் சந்தர்ப்பங்களைக் கற்பனை யில் காண்கின்ருேம். அத்தகைய சந்தர்ப்பங்கள் எழாவிடினும், கனவு காண்பதாலும் கற்பனை,செய்வதாலும் மட்டிலுமே இன்பத்தை அடைகின் ருேம்: கற்பனை யில்லாதவர் வாழ்க்கையைச் சுவையுடன் நடத்த முடி யாது ; இலக்கியம், இசை, சிற்பம், வண்ண ஓவியம், நட்பு போன்றவற் றைத் துய்த்தல் இயலாது. நான்காவது : கற்பனை மகிழ்ச்சியைத் தருகின்றது. கற்பனை யாற்றலுள்ளவர்கள் சிறுகதைகள், நாடகங்கள், கவிதைகள் முதலிய வற்றை எழுதி இன்பம் அடைகின்றனர்; எனவே, கற்பனை படைப்பாற்ற லுக்குத் துணைசெய்கின்றது. புதியன புனைதலுக்குக் கற்பனை மிகவும் இன்றியமையாதது. - ஐந்தாவது : கற்பனை ஒழுக்கவளர்ச்சிக்குத் துணைபுரிகின்றது. சிறுவர்கள் வீரர்கள், பெரியார்கள், சமயத்தலைவர்கள் போன்றவர்களின் வாழ்க்கை வரலாறுகளைப் படித்து, அவர்களைப்போல் ஆகவேண்டும் என்று கற்பனை செய்கின்றனர்; தம்மை அவர்கள் நிலையில் வைத்தும் எண்ணுகின்றனர். இது தன்-மதிப்புப் பற்றினை வளர்த்து ஒழுக்கம் உருவாகத் துணையாக நிற்கின்றது. ஆல்ை, அதிகமான பகற்கனவும் கட்டுக்கடங்காத கற்பனையும் தீங்கு பயப்பனவாம். இதல்ைதான் மாண்டிசோரி அம்மையார் கற்பனையும் கட்டுக்கதைகளும் சிறுகுழவிகட்கு ஆகாதென்பர். இது மிகைபடக் கூறுதலாகும். படைப்புக்கற்பனையும் வெறும் கனவில்தான் தோன்று கிறது. எனவே, குழந்தைகளின் கற்பனைத் திறனை வளர்ப்பதற்குப் பள்ளியிலேயே வாய்ப்புக்களைத் தருதல் வேண்டும். பள்ளியில் கற்பனையை வளர்க்கும் வாய்ப்புக்கள்.: மேலே கூறிய வற்ருல் கற்பனை குழந்தைகளின் ஆளுமை வளர்ச்சிக்கு மிகவும் இன்றி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கல்வி_உளவியல்.pdf/268&oldid=778076" இலிருந்து மீள்விக்கப்பட்டது