பக்கம்:கல்வி உளவியல்.pdf/94

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மனிதனும் சூழ்நிலையும் 73 கருத்துப் பொருளைத் தெளிவுடன் அறிவதற்கு வாய்ப்பு அளிப்ப தாகும். வகுப்பறையில் கற்பிக்கும்பொழுதும், படங்கள், துணைக்கருவி கள், கரும்பலகை முதலியவற்றின் துணைகொண்டு பல புலன்களுக்கு முறையீடு செய்யும் வாய்ப்பு அளிக்கலாம். உற்றுநோக்கல் அறிவு புலன்களின் வாயிலாகவே ஏற்படுகின்றது என்பதை மேலே கண்டோம். எனவே, முதன்மைக் கருத்துக்கள் யாவும் பொருள்களின் நேர்த்தொடர்பு மூலமே உண்டாகின்றன. அஃதாவது, புலன்களின் மூலமே நாம் அறிவினைப் பெறுகின்ருேம், புலப்பயிற்சி உற்றுநோக்கலைக் குழந்தைகளிடம் உண்டாக்குவதையே நோக்கமாக உடையது. உற்று நோக்கல் என்பது என்ன? ஒரு பொருளைக் கூர்ந்து நோக்கி அதன் பகுதிகளையும் விவரங்களையும் குறிப்பாகக் கவனித்தலே உற்று நோக்கல் ஆகும் ; ஒரு பொருளை நோக்கமற்றுப் பார்த்தல் உற்று நோக்கல் ஆகாது. ஒரு பொருளுக்கும் அதுபோன்ற பிறபொருளுக்குமுள்ள ஒற்றுமை வேற்றுமைகளை ஆராய்ந்து பார்த்தால்தான் உற்று நோக்கலாகக் கொள்ளப்பெறும். - உற்றுநோக்கல் என்ன என்பதைச் சில எடுத்துக்காட்டுக்கள் தெளிவு படுத்தும். நாம் பொருள்கள் விற்கும் சந்தைக்குச் செல்லு கின்ருேம். அங்கு, பல்வேறு கடைகளைக் காண்கின்ருேம் இவ்வாறு காண்பது உற்று நோக்கல் ஆகாது. கருணைக்கிழங்கு வாங்க வேண்டும் என்ருல் அதை நினைவில் வைத்துக் கொண்டு, தேங்காய்க் கடைகள், தானியக் கடைகள், பழக்கடைகள், இலக்கடைகள் இவைகளையெல்லாம் ஒதுக்கிவிட்டு, காய்க்கறிக்கடைகளை அடைந்து அவற்றிலும் கிழங்கு வகைகள் விற்கும் இடத்திற்குச் சென்று நமக்கு வேண்டிய கருணைக் கிழங்கு இருக்கிறதா என்று ஊன்றிக் கவனித்தலே உற்று நோக்கல் ஆகும். உற்று நோக்கலில் ஒரு நோக்கம் இருக்கும் ; புலன்களும் மனமும் இயைந்து ஒருமுகப்பட்டுச் செயல் புரியும் : திட்டமாகவும் ஒரு தொடர்புடனும் அவை தொழிற்படும். - உற்றுநோக்கலில் பயிற்சி தருவது தற்காலக் கல்வியின் முக்கிய நோக்கம் ஆகும். இவ்விடத்தில் நாம் முக்கியமாக மனத்தி லிருத்த வேண்டியது என்னவெனில், உற்று நோக்கல் என்பது, ஒருவித தனி மனவன் மை. (faculty) அல்ல. அங்ங்னம் அஃது ஒரு தனி மன. வன்மையாக இருப்பின் ஏதாவது ஒருசிலவற்றில் உற்று நோக்கல் பயிற்சி யளிப்பின், பிறவற்றிலும் அத்திறன் கைவரப்பெறும். ஆணுல், உண்மை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கல்வி_உளவியல்.pdf/94&oldid=778669" இலிருந்து மீள்விக்கப்பட்டது