பக்கம்:கல்வி உளவியல் கோட்பாடுகள்.pdf/110

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

போதாமல் போவது தாய்மார்கள் காணும் அநுபவம், தனிப் புலன்கள் அநுபவம் ஏற்படத் தொடங்கியவுடன் இயைபுமையங்கள் செயற்படும். நான்காம் வயதில் மூளை 100-க்கு 75 பங்கு கனத்தையும், 8-ஆம் வயதில் 90 பங்கு கனத்தையும் 20-ஆம் வயதில் முழுக் கனத்தையும் அடைகின்றது.

இயக்க வளர்ச்சி : முதலில் குழந்தை தன் உடலின் மேல் ஆட்சி புரியக் கற்கின்றது. உண்ணுதல், பருகுதல், கழிவுப் பொருள்களை அகற்றுதல் போன்றவற்றிற்கு இயக்க ஆட்சி தேவையல்லவா? முதல் முதலில் கைகள் இவற்றின் அசைவு, ஒரு பொருளைக் கையாளுதல், நடத்தல், நிற்றல், ஒடுதல், தவழ்தல், பேசுதல், எழுதுதல் போன்ற ஒவ்வொரு செயலும் இயக்கத்தையே நாடுகின்றது. பிறகு வாழ்வில் நாம் மேற்கொள்ளும் தொழில்களும் இயக்கங்களைப் பொறுத்தவையே. நல்வாழ்க்கைக்கு இயக்கங்களின் மேல் தகுந்த ஆதிக்கம் இன்யமையாதது. கல்வியிலும் இயக்கம்பற்றிய தேர்ந்த அறிவும், இயக்கங்களைக் கண்காணிக்கும் திறனும் தேவை.

இயக்க வளர்ச்சியிலும் ஒர் ஒழுங்குமுறை காணப்படுகின்றது. இயக்கங்கள் முறையாக வளர்ந்து பரவுகின்றன; கோலங்களாக அமைகின்றன. முதலில் கண்களின் இயக்கங்களே ஆளப்பெற்று ஒருங்கியைய வருகின்றன. அடுத்து, கழுத்துத் தசைகளின் இயக்கங்கள் ஒற்றுமை பெற்று விளங்குகின்றன. மூன்றாந் திங்களுக்குள் குழந்தை அப்புறமும் இப்புறமும் கழுத்தைத் திருப்புகின்றது; பின்பு தலையையும் மார்பையும் துரக்கிக் கொள்கின்றது. நான்காம் மாதத்திற்குள் கண், தலை, கழுத்து முதலியவற்றின் இயக்கங்கள் ஒருங்கியைய வருகின்றன. ஒருங்கியைய வருகின்ற நிலை பின்னர்த் தோளுக்காக இயங்குகின்றது. தோள்களும் கைகளும் ஒருங்கியைந்து இயங்குகின்றன. கையால் தொடுவதும் பற்றுவதும் முதலான செயல்கள் நிகழ்கின்றன. குழவிகள் 15ஆம் வாரத்தில் விளையாட்டுப் பொருள்களை வைத்து விளையாடுகின்றன. 38-ஆம் வாரத்தில் குழவி கவிழ்ந்து கொள்கிறது. பின்பு, பின்புறமாக நகர்கிறது. நாளடைவில் தவழ்தல், நிற்றல், நடத்தல், ஓடுதல் முறையாக நிகழ்கின்றன. எனவே, தசைகளின் இயக்க வளர்ச்சியும் தலையிலிருந்து இறங்கிவரக் காண்கின்றோம்.

இயக்கத் துலக்கத்தில் நாம் காணும் உண்மை என்ன? தூண்டலின்[1] பின் துலங்கல்கள்[2] எழும் வேகம் விரைந்து


  1. 33.தூண்டல்-Stimulus,
  2. 34. துலங்கல்.Response.