பக்கம்:கல்வி உளவியல் கோட்பாடுகள்.pdf/121

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

102

கல்வி உளவியல் கோட்பாடுகள்


நாட்கள் கழிந்த பின்னரே காட்சிப் புலனும் கேள்விப்புலனும் செயற்படுகின்றன. அசையும் பொருள்களும் குரல் ஒலிகளும் முறையே கண்களையும் காதுகளையும் தாக்குகின்றன. நாளடைவில் காட்சிப் புலனும் கேள்விப்புலனும் தூரச்சூழ்நிலையுடன் அதிகமாகத் தொடர்பு கொள்ளுகின்றன.

கால அறிவு பெருகுதல்: குழந்தை வளரவளர இடத்தால் சேய்மையிலுள்ள பொருள்களைப் போலவே, காலத்தினால் சேய்மையிலுள்ள நிகழ்ச்சிகளும் கவனம் பெறுகின்றன. முன்னைய அதுபவங்களும் வருங்கால எண்ணங்களும் குழந்தையின் அறிவில் பங்கு கொள்ளுகின்றன. அவற்றிற்கேற்றவாறு செயல்புரியும் ஆற்றலையும் குழந்தை அடைகின்றது.

குறியீடுகளைப் பயன்படுத்தும் திறன் வளர்தல்: நாளாக நாளாக நிகழ்ச்சிகளின் பகுதிகளும் குறியீடுகளும் குழந்தையிடம் துலங்கல்களை எழுப்புகின்றன. பால் உருளியில் கரண்டியின் ஒலி கேட்டவுடன் குழந்தை உணவை எதிர்பார்க்கின்றது. முன்னால் இவ்வொலி பால்குடிக்கும்பொழுது எழுந்தது; அந்நிகழ்ச்சியின் பகுதியாகிய ஒலியிலிருந்து முழு நிகழ்ச்சியின் பொருள் தோன்றுகின்றது. மொழி வளர்ச்சி துலங்கியதும் குறியீடுகளைக் கையாளும் திறன் வளரத் தொடங்குகின்றது.

பிற மாறுதல்கள்: முன்னைய அநுபவங்களைப் பயன்படுத்தும் திறனையொட்டிப் பல திறன்கள் தோன்றுகின்றன. நாளடைவில் குழந்தை உடனே பயன்தரும் நோக்கங்களைத் தவிர்த்து நீண்ட பயன் தரும் விழுப்பொருள்களைக் குறிக்கோள்களாகக் கொள்ளுகிறது. காலப்போக்கில் சிறுவன் குறியீடுகளைத் தானாகவே கையாளும் திறனைப் பெறுகின்றான். ஒரு சிற்றுாரின் வரைபடத்தைப் பார்த்தோ, மாவட்டத்தின் வரை படத்தைப் பார்த்தோ அண்மையில் மேற்கொள்ளவிருக்கும் சுற்றுலாவிற்குரிய திட்டத்தைப் போடுகின்றான்; அதையே மனத்தாலும் இயற்றித் திட்டமிடுகின்றான்.

மன வளர்ச்சியில் மேற்கூறிய மாறுதல்கள் நிகழுங்கால், அங்குத் தனித்தனி நிலைகள் இல்லை என்பது உணர்தற்பாலது. ஆயினும், சில வளர்ச்சிப் போக்குகள் ஒரு சமயம் தெளிவாகவும் பிறிதொரு சமயம் தெளிவற்றும் தோன்றுகின்றன. எனவே, மனத்தில் நிகழும் செயல்களை ஈண்டு ஓரளவு ஆராய்தல் இன்றியமையாத தாகின்றது.

முதலாண்டில் புலன்கள் செயற்படுகின்றன; அவற்றினைப் பயன்படுத்தும் திறன் மிகுதியாக வளர்கின்றது. இரண்டாம் யாண்டில் பேச்சு மேன்மையடைகின்றது. உறுமுதல், மழலைச்