பக்கம்:கல்வி உளவியல் கோட்பாடுகள்.pdf/130

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

குழந்தைகளின் வளர்ச்சியும் துலக்கமும்

111



வாகவே இருப்பான். அவன் உணர்ச்சிகள் சிறு காரணத்திற்கும் எளிதாகக் கிளர்ந்தெழும்; விரைவாகவும் அடங்கிவிடும். சிறுவனிடம் உள்ளப் பகைமைய [1] ஏற்படாது; பிறர் செய்யும் தீங்குகளை விரைவாக மறக்கின்றான்; மன்னித்தும் விடுகின்றான்.

நிலைமாறு பருவம் (6 அல்லது 7-8 வயது)

உயரத்தில் ஒழுங்கான, மெதுவான வளர்ச்சியுள்ளது. இப் பருவச் சிறுவன் சுயேச்சையாக இருக்கப் பழகுகின்றான். குழந்தைப் பள்ளியை விட்டுத் தொடக்கநிலைப் பள்ளிக்கு வருகின்றான். எதையும் பெற்றோரிடமிருந்து எதிர்பார்ப்பதில்லை; வீட்டையும் அதிகமாக விரும்புகிறதில்லை. பள்ளியில் கட்டுப்பாட்டிற்கு அடங்கி ஒழுங்காக நடந்து கொள்ளுகின்றான். சிறுவனின் மனத்தைப் பள்ளி அதிகமாகக் கவர்கின்றது; பள்ளியிலேயே அதிக நேரத்தைக் கழிக்க விரும்புகின்றான். சிறுவன் பொறுப்பினை ஏற்க விழைகின்றான்; சற்றுக்கடினமான வேலைகளையும் செய்யும் ஆற்றலைப் பெறுகின்றான்; அவனுடைய நடத்தையும் உயர்நிலையை அடைகின்றது.

இப்பருவத்தில் சிறுவனுக்குப் பலவித நோய்கள் ஏற்படுகின்றன; நோய்களினால் அதிகம் பாதிக்கப் பெறுகின்றான். கழிந்த பருவத்தை விடவும் இனி வரப்போகும் பருவத்தை விடவும் களைப்பினால் அதிகம் தாக்கப்படுகின்றான். இப்பருவ இறுதியில் மூளையும் முழு வளர்ச்சியுற்று இருக்க வேண்டிய எடையைப் பெறுகின்றது.

இன்னும் விளையாட்டில் தனித்தன்மை[2] காணப்பெறுகின்றது; இன்னும் தன் நினைவு மாறுகிறதில்லை. கற்பனை மிகவும் வீறுடன் விளங்குகின்றது; நாடகக் கற்பனை மனத்தைக் கவர்கின்றது. இப்பொழுது சிறுநாடகத்தைப் படித்து நடிக்கத் தூண்டலாம். உணர்ச்சி நிலைகளுக்கும் கற்பனைக்கும் இஃது ஏற்ற பருவமாகும். இப்பருவத்தில் சிறுவர்களுக்குக் கூறட்பெறும் கதைகள் நல்ல முடிவுடையனவாக இருத்தல் வேண்டும்.

எட்டாம் ஆண்டு அவாவுள்ள ஆண்டாகும். உலகமெய்ப் பொருளில் விருப்பம் உண்டாகின்றது. கற்பதில் ஆர்வம் எழுகின்றது. சிறுவன் உள்ளதை உள்ளபடி அறிய விழைகின்றான். எண்ணுவதற்குக் கற்றுக் கொள்ளுகின்றான். கூட்டலும் கழித்


  1. 80. உள்ளப் பகைமை-Malice
  2. 81. தனித்தன்ம--Individualism.