பக்கம்:கல்வி உளவியல் கோட்பாடுகள்.pdf/156

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

குடிவழியும் சூழ்நிலையும்

137


புல்வனாகத் திகழ்த்தால், குடிவழிதான் காரணம் என்று உறுதியாகக்கூறுவது சரியன்று. அவனுடைய தந்தையைப் போலவே அவனும் சூழ்நிலையில் இருந்த பல வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொண்டதால் அத்திறனைப் பெற்றிருக்கலாம். இசைப்புலமை ஒரு தலைமுறையில் சிறிது கால வாழ்க்கையில் பழகியதனால் குடிவழியில் கிடைக்கும் என்று எண்ணுவது சிறிதும் பொருந்தாது. கணக்கற்ற தலைமுறைகளில் பல்லாயிரம் யாண்டுகளின் பழக்கத்தால் பல பண்புகள் குடிவழியாகக் கிடைக்கின்றது என்று கருதுவதில் ஓரளவு பொருத்தம் இருக்கலாம். இதனை மறந்து கணித ஆசிரியரின் மகன் கணிதத்தில் திறமையாளனாக இருப்பான் என்றோ, வரலாற்று ஆசிரியரின் மகன் அறிவியல் வல்லுநனாக ஆக முடியாது என்றோ கருதுவது தவறு. 'குலவித்தைக் கல்லாமல் பாகம் படும்' என்ற மேற்கோளுக்கு உளவியல் கருத்துப்படி சிறிதும் பொருள் இல்லை.

குடி வழி ஒருவனுக்குச் சாத்தியமாகக்கூடிய கூறுகளைக் குறிக்கின்றது; சூழ்நிலை அவற்றைச் சிறந்த முறையில் வளர்க்கும் வாய்ப்பினைத் தருகின்றது; அவ்வளவுதான். சூழ்நிலை மனிதனை ஆக்குகின்றது; மனிதனும் சில சமயம் சூழ்நிலையை ஆக்குகின்றான். வள்ளல் அழகப்பரின் வாழ்க்கையும் அறிவியல் மேதை சி. வி. இராமனின் வாழ்க்கையும் இவற்றிற்குச் சிறந்து எடுத்துகாட்டுகளாக அமையலாம். வள்ளல் அழகப்பர் வெறும் ஆலை முதலாளியாக மட்டிலும் இருந்து கல்விநிலையங்களை ஏற்படுத்தியிராவிட்டால் கல்வித் துறையில் இவ்வளவு சேவை செய்திருக்க முடியாது; வள்ளலாகவும் மலர்ந்திருக்க முடியாது. கணக்குத் துறையில் பணியாற்றிய சர். சி. வி. இராமனுக்கு அச் சூழ்நிலை சிறிதும் பொருந்தவில்லை. அவர் பெளதிக ஆய்வகத்திற்கு வந்ததும் அச்சூழ்நிலை அவரைத் தக்கமுறையில் தூண்டி அறிவியல் மேதையாக்கியது. ஆனால் பொருள் துறையில் அதிக நாள் பணியாற்றிய சர். ஆர். கே. சண்முகம் செட்டியாரை அச் சூழ்நிலை ஒரு பொருளியல் வல்லுநராக்கியது. தக்க சூழ்நிலை அமையாததன் காரணமாக பொறியியல் மேதை ஜி. டி. நாயுடுவின் திறன் நாட்டிற்கு வேண்டுமளவுக்குப் பயன்பட வழியில்லாது போய்விட்டது. இதனால் எத்திறனும் ஏற்ற சூழ்நிலை யில்வளரும் என்பது பெறப்படுகின்றது.

குடிவழியைப் பற்றிய விளக்கம்

குடிவழிபற்றிய தெளிவற்ற கருத்துகளுடன் நாம் மனநிறைவு பெறலாகாது. இதுகாறும் குடிவழிபற்றி நாம் கூறியவை யாவும்,