பக்கம்:கல்வி உளவியல் கோட்பாடுகள்.pdf/180

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

குடிவழியும் சூழ்நிலையும்

461


இந்த உண்மைகள் கல்வித்துறையில் மிகவும் பயன்படத்தக்கவை. கணிதம், சமூகநூல் போன்ற கருத்து புற்றிய துறைகளை மிக இளம் பருவத்தில் குழந்தைகளுக்குக் கற்பித்தலால் பயன் இல்லை. பக்குவமடைந்த பின்னர் தேர்ச்சி விரைவாகச் செல்லுமாதலின், தக்க பருவத்தில் அவற்றைப் பயிற்றுதல் வேண்டும். குழந்தை வேறு, முதிர்ந்த மனிதன் வேறு என்பதை உணரவேண்டும். முதிர்ந்தவனுக்கு ஏற்புவை குழந்தைக்கு ஏலா. இதை அறியாமல் உடல், அறிவு உள்ளக் தகிளர்ச்சி சமூக உணர்ச்சி போன்ற துறைகளில் குழந்தையால் இயலாததை இயலுமென்று எதிர்பார்ப்பதால், பள்ளியிலும் வீட்டிலும் அமைதிக்குறைவு நிலவுகின்றது என்பதை நினைவில் இருத்துதல் வேண்டும்.

மேலே அறிந்தவற்றைத் தொகுத்துக் கூறுவோம். சூழ் நிலை, குடிவழித் தொடர்பு ஓர் இடைவினைத் தொடர்பு என்பதை அறிஞர்கள் ஒப்புக் கொள்கின்றனர். முதலாவதாக இரண்டன் கூறுகளும் ஒன்றோடொன்று ஒட்டிப் பலன் தருவதில்லை. ஒன்றன்வன்மை பிறிதொன்றன் வன்மையாலும் தன்மையாலும் பாதிக்கப்பெறும்.

இரண்டாவதாக, இத்தொடர்பு கணிதக் கூட்டலைப் போன்றதன்று; பெருக்கலைப் போன்றது. ஒருவரது தனிப் பண்புகள் குடிவழிக் கூறுகளையும் சூழ்நிலைக் கூறுகளையும் கூட்டி வருவதன்று; அவற்றைப் பெருக்கி வருவது. எனவே, சூழ்நிலையில் தோன்றும் ஒரு சிறு வேற்றுமை குடிவழியுடன் காணப்பெறும் ஒரு சிறு வேற்றுமையுடன் சேர்ந்து பெருகி மிகவும் வேறுபாடுள்ள ஒரு பண்பினை விளைவிக்கும் என்பதாகின்றது. இத்தகைய வன்மைப் பெருக்கல்கள் ஒருவரது வளர்ச்சியில் மீண்டும் மீண்டும் நிகழ்கின்றன. ஒவ்வொரு பெருக்குத் தொகையும் அடுத்த பெருக்கலுக்கு அடிப்படையாகின்றது. இவ்வாறு வேற்றுமை விரிந்துகொண்டே போகின்றது. இருவருக்கிடையில் காணப்பெறும் சிறிய முதல் வேற்றுமை, அவர்கள் வளர்ச்சியில் ஒன்றோடொன்று அகன்று செல்லும் இரண்டு பாதைகளில் கொண்டு செலுத்தவும் கூடும்.

மூன்றாவதாக, குடிநிலை, சூழ்நிலைகள் எளிய தனி வன்மைகள் அன்று. இவை பல தனி வன்மைகளின் கூட்டத்தால் பெற்ற மிகவும் சிக்கலான தொகுதிகள். வளர்ச்சியில் இவற்றுள் உள்ள தனிக் கூறுகளுக்கிடையே இடைவினை நடைபெறுவ தோடன்றி இத் தனிக் கூறுகளும் ஒன்றோடொன்று இடைவினை இயற்றுகின்றன. குடிவழி ஆயிரக்கணக்கான உயிரணுக்-

சு. உ. கோ.11