பக்கம்:கல்வி உளவியல் கோட்பாடுகள்.pdf/182

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

குடிவழியும் சூழ்நிலையும்

163


அனைவரும் அவ்வாறிலர் என்பதை நாம் அறிதல் வேண்டும். இந்தக் குறைபாடுகளால் பலரது வாழ்க்கை பெரும் போராட்டமாகவே இருந்து வருகின்றது என்பது தெளிவு. இயற்கையான உயரத்தைவிடக் குறைந்திருந்தால்கூட வாழ்க்கையில் ஒருவர் கொண்டுள்ள மனப்பான்மை மாறுகின்றது. சிறப்பாக மகளிரிடம் உடல் வனப்பு அவர்களின் ஆளுமை வளர்ச்சியைப் பெரிதும் பாதிக்கின்றது என்பதை நாம் அன்றாட வாழ்க்கையில் காணலாம். மெல்லிய உடலும் தசைமிக்க உடலும்கூட வழக்கத்திற்குமாறாக விளைவுகளை உண்டாக்கி விடுகின்றன. உடல், காய்ச்சலால் பீடிக்கப்பட்டிருக்கும்பொழுது நம்மால் நன்கு சிந்திக்க முடிகிறதில்லை. சுரப்பிகளில் ஊறும் சாறுகள் தக்க முன்றயில் அமையாவிட்டால் உடல்நிலை பாதிக்கப்பெற்று உள்ள்மும் மீப்பண்புகளும்[1] மாறுகின்றன என்பதை முன்னரே விவரித்துள்ளோம்.

இனி, உள்ளம் உடல்மேல் எங்ஙனம் ஆதிக்கம் செலுத்துகின்றது என்பதைச் சிறிது விளக்குவோம். ஒருவர் அச்சத்தினால் உடலைக்கொண்டு செய்யும் செயல்களைச் சாதாரணமாக அவரால் செய்ய இயலாது என்பதை யாவரும் அறிந்ததே. ஒருவரை ஒரு தாய் அல்லது காளை விரட்டும்பொழுது சாதாரண மாக அவரால் தாண்டமுடியாத குட்டிச்சுவரையும் அவர் தாண்டிக்குதித்து ஒடுகின்றார். சிலசமயம் அச்சம் ஒருவருடைய உடல் வன்மையை மிகவும் குறைத்து அவரை எவ்விதச் செயலும் ஆற்ற முடியாதபடி செய்துவிடுவதுமுண்டு. மனத்திண்மையால் சிலர் செயற்கரிய செயல்களையும் நிறைவேற்றுகின்றனர்; பொறுக்க முடியாத துன்பங்களையும் சகித்துக் கொள்ளுகின்றனர். மகிழ்ச்சியான செய்தியைக் கேட்டதும் பசி தோன்றாது போகின்றது; துக்கமான செய்தி வந்தால் உள்ளம் தளர்ந்து போகின்றது. உணவை உற்சாகத்துடன் உண்டால் செரிமான நீர்கள் நன்கு ஊறுகின்றன. சினமும் அச்சமும் செரித்தலைத் தடுத்துவிடுகின்றன.

மேலான அறிவுடைய விலங்குகள் நன்கு வளர்ந்து தேர்ச்சி பெற்ற மூளையைப் பெற்றுள்ளன. மீனைவிடப் பறவையும், பறவையைவிட எலியும், எலியைவிட நாயும், நாயைவிடக் குரங்கும், குரங்கைவிட மனிதனும் படிப்படியே நன்கு வளர்ந்த மூளைகளையும் அதிகமான அறிதிறனையும் பெற்றிருக்கக் காண்கின்றோம். இவற்றிலிருந்தும் உடலுக்கும் உள்ளத்திற்கும் உள்ள உறவினை அறிந்து கொள்ளலாம்.

உடலில் மாறுபாடுகளை ஏற்படுத்தாத உள்ள நிகழ்ச்சி களைக் காண்பதரிது. அங்ஙனமே, உள்ளநிலையை மாற்றாத


  1. மீப்பண்பு-Temperament