ஊக்குநிலையும் உள்ளக் கிளர்ச்சிகளும்
181
வழிவகைகளை யோசிப்பர்; கட்சி கட்டி வீம்புக்காகப் பலதுறைகளில் இயங்குவர்; ஆசிரியரிடம் சினங் கொண்டு பள்ளிதட்டு முட்டுச் சாமான்களுக்குச்சேதம் விளைப்பர். ஆசிரியர்கள் விழிப்புடனிருந்து இவற்றைச் சமாளிக்கவேண்டும்.
வெகுளியைத் தூண்டும் நிலைகள் : சில ஏதுக்கள் சினத்தை அதிகப்படுத்தும். பசித்து வாடும்பொழுதும், களைத்து மெலிந்து கிடக்கும்பொழுதும், நோயால் வருந்தும் பொழுதும், தூக்கமின்மையாலும் வெகுளி எளிதில் பொங்கி வழியும். இவை யாவும் வெகுளி கொழுந்து விட்டு வளரத்தக்க செழித்த வயல்களாகும். -
பொதுவாக வெகுளி வலியின்மையையே காட்டும். எனவே, ஒருவாறு அவாவிற்கும் ஆற்றலுக்கும் உள்ள இடையீடு அதிகமானால் அவர் எளிதில் சினங்கொள்வர்.
சினத்தைச் சமாளிக்கும் முறை : மேற்கூறியவற்றிலிருந்து வெகுளி நிலைகளை நாம் நன்கு அறிவோம். வெகுளியை விளை விக்கும் நிலைகளைக் குறைக்கும் வழி வகைகளை மேற் கொண்டால் வெகுளியை ஒருவாறு கட்டுப்படுத்தி விடலாம்.
நோய்நாடி நோயின்குணம் நாடி அதுதணிக்கும்
வாய்நாடி வாய்ப்பச் செயல்.[1]"
என்ற வள்ளுவர் வாக்கிற்கொப்ப சினத்தின் காரணத்தை அறிந்து அதை விலக்க ஆயத்தமாக இருப்பதாகக் காண்பித்தல் சிறந்த உளவியல் முறையாகும்.
பள்ளிகளில் ஆசிரியர்கள் அவசியமற்ற தடைகளை ஏற்படுத்தக்கூடாது; பயன் தராத கட்டுப்பாடுகளை நீக்க வேண்டும். மிகக் கடினமான வேலைகள் தருதல், சலிப்பையும் அலுப்பையும் உண்டாக்கும் பயிற்சிகள், உயிரற்ற உற்சாகமற்ற தொல்லையான வேலைகள், வீணாக மாணாக்கர்களை வகுப்பறையில் இருக்கச் சொல்லுதல் போன்றவற்றைத் தவிர்த்தல் வேண்டும்.
பிறருக்குச் சினம் ஏற்படாது தடுக்க முயல்வதற்கு முன்னர் நம் சினத்தை அடக்கிக் கொள்வது சாலச் சிறந்தது. சொல்லுவது யார்க்கும் எளிது; ஆனால் சொல்லியவண்ணம் செயல் அரிது. வெகுளி நிலையைக் கடந்த பின்னர் அமைதியாக ஆராய்ந்தால், உண்மை புலனாகும்; பிறர் செயலைவிட நம் மன நிலையே அதற்குக் காரணம் என்பதை அறிவோம்.
- ↑ 35. குறள்.948.