பக்கம்:கல்வி உளவியல் கோட்பாடுகள்.pdf/241

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

222

கல்வி உளவியல் கோட்பாடுகள்


யால் அல்லலுறும் ஆசிரியர் மேலும் அதிக நேரத்தை இதில் செலவழிக்க வேண்டியுள்ளது. எவ்வளவு சிந்தனை செய்து திட்டம் வகுக்கப்பெறினும், திட்டத்தில் சில இடைவெளிகள் ஏற்படத்தான் செய்கின்றன. இம்முறையில் வகுக்கப்பெறும் திட்டத்தில் இன்றியமையாத சில பாடப்பகுதிகளும் தேவையான அநுபவங்களும் விடப்பெறுகின்றன. சில சமயம் பயனற்ற, உற்பத்தியற்ற தொழிலில் நேரத்தைச் செலவிடவும் நேர்கின்றது. பயிற்சிக் குறைவும் ஏற்படுகின்றது. இதனால் பெறும் அறிவு பயனுடையதாயினும், தொடர்பற்று நிற்கிறது. மாணாக்கர்கள் பல துறைகளைப் பற்றிய முழுக்காட்சிகளை அடைய முடிகிறதில்லை. இறுதியில் கூறிய குறை எல்லா முறைகளுக்கும் பொதுவானதே.

கற்றல்பற்றிய புதிய கருத்து: கற்றல் துலங்கல்களினாலேயே நடைபெறுகின்றது என்பது செயல்முறை வல்லுநர்கள் கூறும் உண்மை. இக்கருத்துப்படி ஆசிரியர் கற்பிக்கலாமேயன்றி, குழந்தையின் கல்வி தன் சொந்தச் செயலாலேயே நடைபெறு கின்றது. எனவே, அறிவைத் திரட்டிப் பெருக்குவதால் பயன் இல்லை; அதனை நடைமுறையில் கையாளுவதே பயன் தருவது.

       அறிவுடையார் எல்லாம் உடையார்; அறிவிலார்
       என்னுடைய ரேனும் இலர்.[1]

என்ற குறளின்படி வெறும் அறிவு, ஆற்றல் அன்று; அதன் நடை முறைப் பயனே ஆற்றலாகும்.

எனவே, புதுமுறைப் பள்ளிகளில் சமுதாய வாழ்க்கையநுபவங்களின் அடிப்படையில் பாடத்திட்டம் வகுக்கப்பெறுகின்றது. ஆதலால் அப்பள்ளிகள் வாழ்க்கை நிலைகளைக் கொண்ட உயிருள்ளதோர் சமூகங்களாகக் கருதப்பெறுகின்றன. பள்ளியில் கூட்டுறவு விற்பனைச்சங்கம், மருந்தகம், பள்ளிச் செய்தி இதழ், கூட்டுறவு அடிப்படையிலமைந்த பள்ளிவேலை முதலியவற்றைக் காண்கின்றோம். மாணாக்கரின் தன்னாட்சி முறைக்கு ஆசிரியர் ஊக்கம் தருகின்றனர். சமூக அநுபவம் பெறுவதற்காக தொழிற்சாலைகள், முன்னேற்ற இயக்கங்கள், சந்தைகள் போன்றவற்றைப் பார்ப்பதற்காக மாணாக்கர்கள் வெளியில் அழைத்துச் செல்லப்பெறுகின்றனர்.

வேலை மூலம் கல்வி

தம் தாட்டின் பண்டைய கல்வி முறையில் வேலைக்கும் கல்விக்கும் நெருங்கிய தொடர்பு இருந்தது. குருகுலக் கல்வி


  1. குறள்-430.