பக்கம்:கல்வி உளவியல் கோட்பாடுகள்.pdf/358

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

உடல்நலமும் உடல்நல வியலும்

339


இனப்பெருக்க உறுப்புகளில் நிகழும் மாற்றங்களும் பிறவும் அவர்களைத் திடுக்கிடச் செய்வதில்லை; திகைப்பையும் துயரத்தையும் உண்டாக்குவதில்லை.

மேற்கூறிய இனப்பெருக்கம்பற்றிய தகவல்களைத் தவிர, குமரப் பருவத்தில் தம்மிடையே நிகழும் மாறுபாடுகளையும் ஒவ்வொரு சிறுவரும் சிறுமியரும் அறிந்துகொள்ள வேண்டும்,

(i) குமரப்பருவத்தில் சிறுவன் பக்குவம் அடையும்பொழுது விரைகளில் முற்றிய நிலையெய்திய விந்து இரவில் துயிலும் பொழுது வெளிப்படுவதுண்டு. இஃது இயல்பாக நிகழ்வது; இதனால் யாதொரு விபத்தும் இல்லை. சிறுவனுக்கு இதுபற்றிய அறிவு பகட்டாவிடில் அவன் மட்டரகமான விளம்பரங்களைப் படித்து, அதனால் வீணான மனத்தொல்லைகளை அநுபவிக்க நேரிடும். இவ்வாறு விந்து வெளிப்படுதல் ஒரு வாரம் முதல் ஆறு வாரங்கள் வரை உள்ள இடைக்காலங்களில் நிகழலாம், இஃது அடிக்கடியும் தொடர்ந்தும் நிகழ்ந்தால், மருத்துவரைக் கலந்து ஆலோசிக்க வேண்டும்.

(ii) குமரப் பருவத்தில் சிறுமிகளிடம் முக்கியமாகத் தோன்றும் நிகழ்ச்சி பூப்படைதல் ஆகும். இதைப்பற்றிய முழு விவரங்களையும் திங்கள் தோறும் 28 நாட்களுக்கொருமுறை ஏற்படும் மாதவிடாய்ப் பற்றியும் சிறுமிகளுக்கு அறிவிக்க, வேண்டும். அவர்கள் பிள்ளைபெறும் பருவத்தை எய்தி விட்டார்கள் என்பதைத் தெளிவுறுத்த வேண்டும்.

பால்-கல்வி தருவதைப்பற்றிய கருத்து வேற்றுமை: பால்-கல்வி தருவதைப்பற்றிக் கருத்து வேற்றுமைகள் உள்ளன. சிலர் பால்-கல்வி வேண்டும் என்றும், சிலர் அறவே கூடாது என்றும் வாதிக்கின்றனர்.

தேவை என்பார் கூறுவது: இந்த நவீன காலத்தில் முற்றிலும் பழைய எண்ணங்களே நிலவ வேண்டும் என்று நினைப்பது சரியன்று. இன்றைய இளைஞர்கள் படக்காட்சிகள், புதினங்கள்[1] செய்தித்தாள்கள் ஆபாசமான விளம்பரங்கள் முதலியவற்றின் ஆதிக்கத்திற்கு உட்பட்டவர்கள். இவற்றால் பாலைப்பற்றியே தவறான எண்ணங்களைப் பெறக்கூடும். இதை அவசியம் தடுக்க வேண்டும்.

ஆண்பாலாரும் பெண்பாலாரும் வாழ்க்கைக்குத் தக்கமுறை யில் பொருத்தப்பாடு அடையவேண்டுமாயின் பாலைப்பற்றிய சரியான அறிவு அவர்கள் பெற்றிருக்க வேண்டும். எதிர்பால்


  1. புதினம்-Novel