பக்கம்:கல்வி உளவியல் கோட்பாடுகள்.pdf/433

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இயல்-13

ஆசான்

"ஆசான் எப்படியோ, அப்படியே பள்ளியும்" என்பது ஓர் பழமொழி; கல்வித்துறையில் ஆராய்ச்சிகள் மிக மிக, இப் பழமொழியின் - உண்மையும் உறுதிப்பட்டுக்கொண்டே வரு கின்றது. அழகான கட்டடங்கள் , நவீன பாட நூல்கள், 'தாராளமான ஆய்வக - வசதிகள், அளவற்ற கற்பிக்கும் சாதனங்கள், பெரிய நூலகங்கள்-இவை யாவும் ஒரு பள்ளிக்கு 'வாய்த்திருப்பினும், - அது சிறந்த பள்ளியென்று சொல்வதற் - கில்லை., 'ஆளைக் கண்டு மயங்காதே, ஊது காமாலை' * என்று சொல்வதுபோல், அவை யாவும் புறத்தோற்றமே; - வெறும் வெளிப்பகட்டே. இவற்றின் உள்ளே - உயிர் நாடிபோல் இருப்பவர்கள் ஆசிரியர்களே, நல்ல ஆளுமைப் பண்புகள் - பெற்ற. உற்சாகமுள்ள ஆசிரியர்கள் அங்கு இல்லாவிடில், * அனைத்தும் - வீணே; அவை விழலுக்கிறைத்த 'நீராகவே - முடியும்.

கல்வி உளவியல் என்பது ஆசிரியரைப்பற்றியும், மாணாக்கர் களைப்பற்றியதுமான - ஒரு துறை. தொடர்ந்தாற்போல் மாணாக்கர்களைப் - பற்றிச் - சரியாக - அறிந்துகொள்வதோடு * தன்னுடைய அறிவையும் வளர்க்கும் முறைகளையும் மிகக் 'கவனத்துடன் - திறனாய்ந்து அறிவதில் தான் - ஆசிரியத் * தொழிலின் வளர்ச்சி அடங்கியுள்ளது. ஆசிரியரின் பயிற்றும் - முறைகளை மாற்றம் செய்யவேண்டும் என்ற தன்னுடைய - - விருப்பம், குழவிகளுடன் : பணியாற்றும் பொழுது. தான் கொள்ளும். உறவு முறைகள், தன்னுடைய பிற திறன்கள். -- ஆகியவற்றில் - எல்லாம் ஆசிரியத் தொழில் வளர்ச்சியின் உயிர்நாடி பேசும்; பிரதி பலிக்கும். மாணாக்கர்களின் தனித் தனி நடத்தையும், அவர்கள் ஆசிரியருடனும் தம்மொடு தாமும் இடைவினை இயற்றுவதும் அவர்கட்கு வாய்த்துள்ள ஆசிரிய