418
கல்வி உளவியல் கோட்பாடுகள்
தொழிலில் இறங்கும் ஆசிரியைகளையும், குழந்தைகளிடம் உண்மையான ஆர்வமும் அன்பும் இல்லாது இத்தொழிலை மேற்கொண்டவர்களையும், குறைந்த உழைப்பு, நிறைந்த விடுமுறை இதில் உள்ளன என்று கருதி இத்துறையில் புகுந்து விட்டவர்களையும், எந்த வேலையும் கிடைக்காததால் இத் தொழிலுக்கு வந்தவர்களையும்பற்றி ஈண்டு ஆராயப் போவ தில்லை. ஆசிரியத் தொழில் ஓர் அருட்பணி என்று உண்மையாகவே எண்ணி இதில் புகுந்து பணியாற்றும் நல்லாசிரியர்களை மட்டிலுமே ஈண்டு கவனிப்போம்.
நல்லாசிரியர்கள்: நல்லாசிரியரின் இயல்பை நன்னூல்,
"குலனருள் தெய்வம் கொள்கை
மேன்மை கலையில் தெளிவு கட்டுரை வன்மை
நிலம்மலை நிறைகோல் மலர்நிகர் மாட்சியும்
உலகியல் அறிவோடு உயர்குணம் இணையவும்
அமைபவன் நூலுரை யாசிரி யன்னே.[1]
என்று குறிப்பிடுகின்றது. நல்லாசிரியரை நிலம், மலை, துலாக் கோல், மலர் ஆகியவற்றுடன் ஒப்பிட்ட காரணத்தையும் விளக்குகின்றார் ஆசிரியர். [2]அன்றியும், இந்நூலில் ஆசிரியத் தொழிலுக்கு அருகதையற்றவர்கள் யாவர் என்பதும் குறிப்பிடப் பெற்றுள்ளது.
"மொழிகுணம் இன்மையும் இழிகுண இயல்பும் அழுக்கா றவாவஞ்சம் அச்சம் ஆடலும்
கழற்குடம் மடற்பனை பருத்திக் குண்டிகை
முடத்தெங் கொப்பென முரண்கொள் சிந்தையும்
உடையோர் இலர்ஆ சிரியர்ஆ குதலே."[3]
ஆசிரியத் தொழிலுக்கு அருகதையற்றவர்களைக் கழற்குடம், மடற்பனை, பருத்திக் குண்டிகை, முடத்தெங்கு ஆகியவற்றுடன் ஒப்புமைப்படுத்திக் காட்டுகின்றார். இவ்வாறு ஒப்புமைப்படுத்தியதன் காரணத்தையும் விளக்குகின்றார் ஆசிரியர்.[4] கற்பிக்கும் முறைகளை நுவலும் மேனாட்டு நூல்களும் நல்லாசிரியரின் பண்புகளை எடுத்து இயம்புகின்றன.
ஆசிரியர் பெற்றுள்ள பொருள் அறிவு வேறு; அப்பொருளறி வினைக் கவர்ச்சியுடன் மாணாக்கர்கட்கு எடுத்துரைக்கும் திறன்