பக்கம்:கல்வி உளவியல் கோட்பாடுகள்.pdf/451

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

432

கல்வி உளவியல் கோட்பாடுகள்


தாலும் சமாளிக்க வேண்டும். பல ஆசிரியர்கள் கண்ணியமாகப் பாராட்டப்பெறாமலும் இல்லை. பக்குவம் பெறாத குழந்தை களிடம் அதிகமாகப் பழகுவதால் ஆசிரியர்களுக்குத் தகுந்த பாராட்டு கிடைப்பதில்லை. வழக்கறிஞர், மருத்துவர் ஆகிய வர்கள் பக்குவமடைந்த பெரியோர்களுடன் பழகுவதால் அவர் களின் திறமை அறியப்பெற்றுப் பாராட்டப் பெறுகின்றனர்.

பள்ளி வசதிகளை முதிர்ந்தோர் பயன்படுத்தும் ஏற்பாடு: பள்ளிப் படிப்பகத்தையும் நூலகத்தையும் வார விடுமுறை நாட்களிலும், வேலை நாட்களின் இரவு நேரத்திலும் சமூகம் பயன்படுத்திக் கொள்ளும் வாய்ப்புகளை அமைத்துத் தரலாம். ஆடுகளத்திலும் விளையாடும் ஏற்பாடுகளை ஒரளவு அமைத்துத் தரலாம.

வேறு சாதனங்கள்: பெற்றோர் கழகம், பிள்ளைகளின் வீடுகளைப் பார்வையிடுதல், பள்ளிப் பிரசாரம், பழைய மாணாக்கர் கழகம், தேர்ச்சி அறிக்கைகள் முதலிய சாதனங் களால் சமூகத்துடன் ஆசிரியர்கள் உறவு முறைகளை ஏற்படுத்திக் கொள்ளலாம்.

ஆசிரியப் பணியின் சிறப்பு: இவ்வுலகில் ஆசிரியப் பணியைப்போல் வேறொரு சிறந்த பணியைக் காண்பது அரிது. மக்கள் சமுதாயம் முழுவதும் ஆசிரியர்கள் மூலம்தான் உருப்படுகின்றது. தனியாட்களின் வாழ்க்கையை உருவாக்கு வதற்கு இதனைப்போல் வாய்ப்புகளை நல்கும் வேறொரு பணி இவ்வுலகில் இல்லை என்று சொல்லலாம். ஆசிரியப் பணியை மக்கட் சமுதாயத்தை உருவாக்கும் மானிடப் பொறியியல் பணி என்று கூறினும் பொருந்தும்.

நாள்தோறும் கள்ளங்கபடமற்றுத் தூய்மையான சிந்தை யுடன் அறிவினைப் பெறுவதற்காகப் பள்ளிகளுக்கு வரும் தெய்வ உருவங்களாகிய குழந்தைகளிடம் பழகுவது பேரின்பத் தைத் தருவதாகும். எண்ணற்ற குழவிகளின் அறியாமையைப் போக்கி அறிவினை ஊட்டும் ஆசிரியர்கள் பாரதப்போரில் அருச்சுனனுக்கு ஏற்.ட்ட தற்காலிக மயக்க உணர்வையும் அஞ்ஞான இருளையும் அகற்றி ஞானத்தை ஊட்டிய கீதாசிரியன் நிலையில் உள்ளார்கள். இவர்களது தொண்டினை எந்த அளவுகோலாலும் அளக்க முடியாது. தமக்கென வாழாது பிறர்க்கென வாழ்வதனால் உண்டாகும் இன்பமே அவர்கள் பெறும் பரிசாகும்.

சில குறைபாடுகள்: உரோசாமலரிலும் முள்ளுண்டு: இன்பத்திலும் துன்பம் உண்டு. ஆசிரியர்களும் மனிதர்களே.