பக்கம்:கல்வி உளவியல் கோட்பாடுகள்.pdf/92

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மனிதனும் சூழ்நிலையும்

73


ஊக்குவது இத் நொப்புலன் அல்லவா? உயர்நிலை அடைந்த உயிரிகளிடையே இந்நொப்புலன் தலைசிறந்து விளங்குகின்றது.

இயக்கப் புலன்கள்[1] '

நம்முடைய உடலில் பல்வேறு உறுப்புகளின் சில இயக்கங்கள் சதா நடைபெற்றுக் கொண்டிருப்பினும் அவ் வியக்கங்களை நாம் அறிவதில்லை. இந்த உணர்வுகள் அதிகமாகத் திரண்டும் பரவிய நிலையிலும் காணப்பெறுகின்றன. உடலில் பல்வேறு வகை இயக்கப் புகுவாய்கள் உள்ளன. பெரும்பாலானவாய இயக்கப் புகுவாய்கள் வடிக்கதிர் வடிவாக உள்ளன. இவை தசைகளிலும் என்புப் பூட்டுகளிலும் அமைந்துள்ளன. சில இயக்கப் புகுவாய்கள் குமிழ்வடிவான அமைப்புகள்; அவை பல்வேறு தசைநார்களிலும் [2]என்புப் பூட்டுகளைச் சுற்றியுள்ள இடங்களிலும் அமைந்துள்ளன. இயக்கப் புகுவாய்கள் தூண்டப் பெறுங்கால், நரம்புத்துடிப்புகள் முதுகு நடுநரம்பு[3] வழியாகச் சிறுமூளைக்கும் பெருமூளையின் புறணி[4]க்கும் கடத்தப் பெறுகின்றன. சாதாரணமாக, வளர்ந்தவர் ஒருவர் தம்மிடம் அமைந்துள்ள இயக்கப் புகுவாய்களின் திறமை காரணமாகவும் சிறுமூளை சரியாக இயங்குவதன் காரணமாகவும் மிக நேர்த்தியான பொருத்தப் பாடுகளை ஏற்படுத்த முடிகின்றது. தட்டச்சுப்பொறியினை[5]: இயக்குவோரும் பின்னல் வேலை செய்வோரும், வீணை அல்லது யாழினை மிழற்றுவோரும் மிக துட்பமான அசைவுகளைச் செய்வதற்குக் காரணம் அவர்களிடம் இயக்கப் புகுவாய்கள் சிறந்த முறையில் அமைந்திருப்பதேயாகும். நாம் சாதாரணமாக ஊற்றுப்புலன் என்று கூறுவதில் இயக்கப்புலனும் தொடுபுலனும் அமைந்துள்ளன. பட்டினைத் தடவும்போதும் உப்புத்தாளைத் தடவும்போதும் உண்டாகும் உணர்ச்சி வேற்றுமை அமுக்கத் தால் மட்டிலுமல்ல, இயக்கத்தாலும் உண்டாவதாகும். தொழில் மூலம் கல்விபுகட்ட வேண்டும் என்று கூறும் இக்காலத் தில் இப்புலன்களுக்கு முக்கியத்துவமுண்டு.


  1. 153.இயக்கப் புலன்கள் '-Kinaestetic sense.
  2. 154. தசைநார்கள்.Tendons.
  3. 155.முதுகு நடுநரம்பு-Spinal chord.
  4. 156.பெருமூளையின் புறணி-Cerebral cortex.
  5. 157. தட்டச்சுப்பொறி. Typewriter.