பக்கம்:கல்வெட்டில் ஊர்ப்பெயர்கள்.pdf/5

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நன்றியுரை

ஊர்ப் பெயர்கள் பற்றிய ஆய்வினால் சமுதாயம் அடையும் பயன் பெரிது. இதை அனைத்துலகும் புரிந்து செயல்பட்டு வரும் இக்காலக் கட்டத்தில் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனமும் ஊர்ப் பெயர்கள் பற்றிய ஆய்வுப் பணியை நடத்தி வருகிறது. தமிழக ஊர்ப்பெயர்கள் அனைத்தையும் மாவட்ட வாரியாக ஆய்ந்து வெளியிடும் திட்டத்தின் தொடக்க நிலையாக இந்நூல் வெளி. வருகிறது. கல்வெட்டுகள் வழி தெரிய வரும் ஊர்ப்பெயர்கள் உணர்த்தும் செய்திகள் இந்நூலினுள் இடம் பெற்றுள்ளன. நல்ல பல திட்டங்களை அமைத்துச் செயல்படுத்துவதன் மூலம் தமிழுக்குத் தொண்டு புரிவதையே தன் வாழ்வின் குறிக் கோளாகக் கொண்டிருக்கும் நிறுவன இயக்குநர் டாக்டர் ச.வே.சுப்பிரமணியன் அவர்கள் இந்நூலை உருவாக்கி வெளி யிடும் வாய்ப்பை எனக்குத் தந்தமைக்கு என் உளமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்ளுகிறேன். இந்நூல் உருவாகுங்கால் தம் கருத்துகளைத் தந்து துணை புரிந்த நண்பர்கள் அனைவர்க்கும் நன்றி. இந்நூலைச் சிறப்புற அச்சிட்டுத் தந்த நாவல் அச்சகத்தார்க்கும் நன்றி. ஆர். ஆளவந்தார்