பக்கம்:கல் சிரிக்கிறது.pdf/106

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

@s了。 李。夏rfr。 # G# கள் இப்படித்தான், இதற்காகததான்-கோமதி காரண மாகத்தான் சந்திக்கணும்னு விதிச்சிருக்கு... சூழ்நிலை, சம்பவங்கள், சந்தர்ப்பங்கள் எல்லாம் இந்த விதியை நோக்கித்தான் என்னை உந்தித் தள்ளிக் கொண்டிருக் கின்றன. நான் வந்த காரியம் இதுதான். இது எனக்காக அல்ல, கமலாம்பிகைக்கே தெரியும். கமலாம்பிகே, உன் உத்தரவு என்ன? கமலாம்பிகைக் கென்ன, புன்னகை பூத்த வண்ணம் தான். புன்னகையரசி கே. ஆர். விஜயா இவளிடம் என்ன பண்ணிக்க முடியும்? எண்ணி எண்ணி என் துரக்கம் - இருக்கிற அரைகுறை யும் கெட்டுப் போயாச்சு, கண் மிளகாய்ப் பழமா எரி யறது. இன்னிக்கு ரூமிலிருந்து தூக்க மாத்திரையை எடுத் துண்டு போகணும். ஆச்சு, இங்கேயும் சுருக்கக் கடையைக் கட்ட வேண்டியதுதான். நவ க்ரஹப்ரதிஷ்டையிருந்தால் சனி பகவானை உத்தேசிச்சுக் கொஞ்சமாவது சுறுசுறுப்பு இருக்க வழியிருக்கு. திரும்பத் திரும்ப அம்மன் மட்டுந் தானே! பன்னிரண்டு மணி வாக்கில் ஒரு கையில் பென்சில் டார்ச், ஒரு கையில் சாவிக் கொத்துடன் படியிறங்கி வருகையில் தர்மராஜனுக்கு உடம்பில் ஒரு ஜிவ்வு தண் ரீைரில் குட்டிக்கரணம் டோடுகையில் அடி வயிறு சுருள்வது போல். தன் வாண்டு நாட்களில் கிராமத்தில், மரத்தின் உச்சாணிக் கிளையிலிருந்து துரவுக் கிணறில் டைல்’ அடிப்பது போல் த்ரில் - உடம்பிலேயே ஒரு லேசு. அந்த லேசுனாலேயே ஏதோ ஆத்மானுபவ ஆனந்தம். அதி கணக்காய்ப் பார்த்தால், இடையில் வேறு சிக்கல் நேராம விருத்தால் பத்து திமிடங்களில் முடிந்து விடுகிற வேலைக் குத்தான் இத்தனை நாள் தவம், தான் கவனித்தவரை, அறிந்து கொண்டவரை சிக்கல் இருக்கவோ நேரவோ நியாயமில்லை. இது ஸிம்பிளாய்த் திறந்து மூடல் கேஸ் தான,