பக்கம்:கல் சிரிக்கிறது.pdf/62

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

邸f了。守。乒T了。 5? அப்போ ஏன் போகனும்?" கோமதி சொன்னதையே சொல்லிண்டிருக்காதே." "இந்தாங்கோ, கையில் ஒரு அஞ்சு ரூபாயிருக்கட்டும்; போற வழியில் ஒரு நெஞ்சை வலிச்சா ஒரு சோடா குடிக் கணும்னா...' சோடா குடிக்கணும்னா சோடாக் கடை இந்த நேரத்துக்கு இருந்தால்தானே! குட் நைட்.” 'மறுபடியும் எப்போ நாம் சந்திக்கிறது ஸார்? இன்று காலை வராப்போல் வந்தேள். நீங்கள் வந்தது எனக்கு எவ்வளவு பெரிசு, எவ்வளவு தைரியம் தெரியுமா? இதோ, உடனே போகணுங்கறேள்!' 'இந்த நேரத்துக்கு என்னை வழியனுப்ப நீ வாச லுக்கு வர வேண்டாம். வாசலில் நிற்க வேண்டாம். உள வறிஞ்சவன் எவனாவது உள்ளே புகுந்துடப் போறான். கடவுள் துணையிருப்பார்.' அவர் தெருவில் இறங்கி விட்டார். திருப்பத்தில் திரும்பிப் பார்த்தார். அவள் வாசலில் நின்று கொண்டிருந்தாள்.