பக்கம்:கல் சிரிக்கிறது.pdf/66

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

念、fr. 学、『fず。 5 f ஏழை எங்கேயும் ஏழைதான். தவிர நம்ம ஊரிலே ஒரு வியாபாரம் தொழில்னு முன்னேற வழி கிடையாது. தூக்கம் பிடிச்ச ஊர். வெயில் சுள்ளுனுஅடிக்காது. ஆத்தா எனக்கும் தம்பிக்கும் ஆளுக்கு ஒரு காதுத் தோடும் கட்டைக் காப்பும் கொடுத்து எப்பிடியானும் புளைச்சுக் கோங்கோன்னு உதறிட்டா. தம்பியும் நானும் சென் னைக்கு வந்து கூட்டுலே ஒரு காய்கறிக் கடை ஆரம்பிச் சோம். ஒருத்தன் கடையிலே, ஒருத்தன் காலையிலே கொத்தவால் சாவடிக்குப் போய்ச் சரக்குப் பிடிச்சு வரு வோம். மிச்சப் போதுக்கு ரெண்டு பேரும் கடையிலே, குடும்பம் ஊரிலே. ஏதோ ஒரு வேளை பொங்கி ரெண்டு வேளைக்கு வெச்சுக்குவோம். 'காய்கறிக் கடை கொஞ்சம் உருப்பட்டதும் பக்கத் துலே ஒரு இட்டிலிக் கடை ஆரம்பிச்சோம். ஊரிலேருந்து என் சம்சாரத்தை மட்டும் வரவளைச்சேன். மாவு ஆட்ட னுமே! இட்டிலி மிஞ்சினா மூணு வவுத்துக்கு ஆச்சு. அன்னிக்கு சோறு வடிக்க்த் தேவையில்லை. ஆனால் சரக்கு மிஞ்சாது. 'சாமிக்குத் தெரியாதில்லே. வியாபாரம் சரக்கு சுத்தத் துலே கூட இல்லே. வாய் சுத்தத்துலே தானிருக்கு. இந்த மெட்ராஸ் பாஷையெகேக்கற்ப்பே ஒரொருசமயம்மனசே கெட்டுப்போவுதுங்க. 'ஐயா வாங்க' 'ஐயா அமருங்க!” "ஐயா வlங்களா? தெருவிலே பார்த்தால்கூட, 'ஐயா வாங்க!'தான் எங்க பாஷையில். போவே' கிடையாது. இதுக்காவே நம்ம ஊர்ப்பையனையே வரவளைச்சுடற்து. கடை வியாபாரம் புளைச்சது. ஊர்க்காரனும் புளைச் சுட்டுப் போறான். கடையில் மரியாதைப் பஞ்சத்துனாலே மூடியாச்சுன்னு பேர் கூடாது. கலிக்காரன் வாய்க் கொழுப்புக்கு வியாபாரம் பலியாகக் கூடாது. “ஒரு மூணு வருசத்துக்கு முன்ன ாலே விஷ சுரத்துலே படுத்துட்டேனுங்க. ஊரைப் பார்க்கப் போயிட்டேன். சென்னையில்ே படுத்தால் கட்டுப்படியாவாதுன்னு தெரி