பக்கம்:களத்தில் கருணாநிதி.pdf/14

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

13 இதைக் கவனிப்பதைவிட, இவர்கட்கு வேறு வேறு வேலைகள் பலப்பல இருக்கின்றன. காமராஜர் எங்காவது கல்லூரி மூடுவிழா நடத்துவார். பக்தவத் சலனார் பங்களாத் திறப்புவிழாச் சொற்பொழிவு நிகழ்த்திக் கொண்டிருப்பார், குமாரசாமிராஜாவோ எங்காவது கும்பாபிஷேக வைபவத்திற்குத் தலை மைப் பொழிவு நடத்திக் கொண்டிருப்பார். இப்படிப் பட்ட வேலைகள், சதா சுற்றிச் சுழன்று சுழன்று வேலை செய்கின்றனர். இதையெல்லாம் மறந்து மக் கள் துயர் துடைத்திடும் பணியில், துன்பப்புயலை மாற்றிடும் காரியத்தில் இறங்கமுடியாதல்லவா? மக்கள், பசி, பசி என்று கதறிக் கொண்டிருக் கும் நாட்களிலே தான் நான் ஆரம்பத்தில் குறிப் பிட்டபடி ஆயிரத்துக்கும் மேற்பட்ட துப்பாக்கிப் பிர யோகங்கள், சிறைச்சாலையிலே கைதிகள் அடைப்பு வேலைகள் முதலியன நிகழ்ந்து வருகின்றன. சிறைச்சாலை - சிறையிலே கைதிகள் ! அதுவும் ! அரசியல் கைதிகள், காவற் கைதிகள் பதினாயிரத் துக்கு மேற்பட்டவர்கள் உள்ளனர். சிறைச் சம்பவங் கள், சிறையிலே நடக்கும் சீரழிவுகள் நம்சிந்தனை யிலேசெந்தீ மூட்டிடும் அளவுக்கு மகாமகா கோரமும் கொடுமையும் நிறைந்தவை. எல்வளவோ சிறைச் சம்பவங்கள் நடந்தன. அதிலே ஒன்று. திருவாங்கூர் பகுதியில் ஒருவரைக் கைதுசெய்தனர்; காவற் கைதியாக அடைத்தனர், சிறையிலே. அவரை உண்மை உரை-உண்மை உரை இன்றேல் உதை விழும் என்று உருட்டி