பக்கம்:களப்பிரர் ஆட்சியில் தமிழகம்.pdf/138

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

137 களப்பிரர் ஆட்சியில் தமிழகம்

தூக்கியெறியப்பட்ட இந்நிலத்திற்குரிய மக்களுக்கும் (Peoples of land) இடைமறித்துத் தொல்லையளித்த (interlopers) களப்பிரருக்கும் இடையில் பகை நிலவியது என்பது உறுதி” (பக் 101. அழுத்தம் நமது)

என்று முடிக்கிறார்.

சாஸ்திரியார் ‘இருண்ட குலம்,’ ‘இருண்ட காலம்’ என்றெல்லாம் களப்பிரரைக் குறிப்பதென்பது ஏதோ, அக்காலகட்டத்திற்கான வரலாற்றாவணங்கள் இல்லாமையைக் குறிப்பதற்காக மட்டுமன்று. அவரது ‘தென்னிந்திய வரலாறு’ நூலில்,

“சங்க காலத்திற்குப் பிறகு ஒரு நீண்ட இருள் படர்ந்த காலம் நிலவக் காண்கிறோம்..... மறுபடியும் இருள் அகன்று கி.பி.ஆறாம் நூற்றாண்டு அளவில் வரலாறு ஒளிவீசத் தொடங்குகிறது. 6ம் நூற்றாண்டில் இனங் கண்டு கொள்ள முடியாத நாகரீகத்தின் எதிரிகளான களப்பிரர் என்னும் கொடிய அரசர் வந்து நிலைகொண்டு விட்டனர். நிலைபெற்ற அரசியலமைப்பு தூக்கியெறியப்பட்டது.”

(இலங்கை அரசு வெளியீடு, 1966, பக். 158-அழுத்தம் நமது.) என்று குறிப்பிடுவதிலிருந்து களப்பிரர் காலத்தை நாகரீக வளர்ச்சியற்ற இருண்ட காலமாகவே கருதினாரென்பது புலப்படும்.

களப்பிரர் காலத்தைக் குறிக்கப் பேராசிரியர் பயன்படுத்திய சில சொற்கள்-interregnum, interlopers, dark age, Political unsettlement.. முதலியன பின்னாளில் களப்பிரர் கால வரலாறு எழுதுவதற்கான குறியீட்டு வழிகாட்டல்களாகவே மாறின. இச்சொற்களுக்கு அகராதிகள் அளிக்கும் விளக்கங்கள் அறியத் தக்கன.

(Kalabrha) interegunm: the time between two reigns, any breach of continuity in order, break in the continuity and norms, ஒழுங்கான அரசனில்லாக் காலம்.
interloper : தலையிடுபவர், தன் ஆதாயங்கருதிப் பிறர் காரியங்களில் தலையிட்டுத் தொல்லை

தருபவர், உரிமையற்ற வணிகர்

‘சேம்பர்ஸ்’ மற்றும் ஏ.சி.செட்டியார் அகராதிகள் அளிக்கும் பொருள்கள் இவை.

ஆக, நேர்ப்போக்கான ஒரு வரலாற்று வளர்ச்சியையும், சீரான ஒழுங்கையும் குலைத்துச் சிதைத்த, இம் மண்ணுக்கு உரிமையற்ற அநாகரிகர்கனாகக் களப்பிரரின் இருண்ட காலம் அமைந்தது என்கிற புரிதலை உருவாக்கி நிலைப்படுத்தியமையில் பேராசிரியர் சாஸ்திரியாரின் பங்கு கணிசமானது. இதர வரலாற்றறிஞர்களும் சளைத்தவர்களல்ல. அண்ணாமலைப் பல்கலைக் கழக வெளியீடாக வந்த ‘சிவஞான போதம் மூலமும் சிற்றுரையும்’ நூலின் (1953) முகப்புரையில் சைவத் தமிழறிஞர் ஔவை துரைசாமிப் பிள்ளையவர்கள்,

“இக்களப்பிரர் தமிழரல்லர்; தமிழ் நாட்டவருமல்லர். பல்லவர்