பக்கம்:களப்பிரர் ஆட்சியில் தமிழகம்.pdf/37

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மயிலை சீனி வேங்கடசாமி

36

தாயைப் போல சேய் என்னும் பழமொழிக்கு ஏற்ப தாயினுடைய கொலையுள்னம் சங்காவுக்கும் இருந்தது.

சத்தக் காகசன் (கி.பி.434)

இவனுடைய இயற்பெயர் தெரியவில்லை. சத்தக்காகசன் என்பது சத்திரக்காகசன் என்பதன் சிதைவு. சத்திரம் என்றால் அரசனுடைய கொற்றக்குடை என்பது பொருள். இவன் மகாநாமின் கொற்றக்குடை ஏந்தும் அலுவலனாக இருந்தான். மகாநாமன் தன்னுடைய சிங்கள மனைவியின் மகளான சங்கா என்பவளை இவனுக்கு மணஞ் செய்வித்தான். மகாநாமன் இறந்த பிறகு அவனுடைய மகனான சொத்திசேனன். அரசனானனான். சொத்திசேனன், மகாநாமனுடைய தமிழ மகிஷியின் மகன் என்பதையறிந்தோம். இவன் முடிசூடின அன்றையத் தினமே இவனுடைய சிங்களச் சகோதரியினால் கொல்லப்பட்டிறந்ததையும் இவன் சிங்கள அரசின் சிம்மாசனம் ஏறினான். இவன் ஓராண்டு காலம் அரசாண்டான். இவன் இறந்த பிறகு இவனுடைய உடம்பை அமைச்சன் அரண்மனையிலேயே கொளுத்தி விட்டு, மித்தசேனன் என்பவனை அரசனாக்கினான்[1]

மித்தசேனன் (கி.பி.435-436)

சத்தக் காகசன் இறந்த பிறகு, அமைச்சன் (அவன் பெயர் தெரியவில்லை ) மித்தசேனன் என்பவனைச் சிங்கள நாட்டு சிம்மாசனத்தில் அமர்த்தினான். அக்காலத்தில் சிங்கள அரச குலத்தைச் சேர்ந்தவர் ஒருவருமிலர் என்று தோன்றுகிறது. அரசனாக அமர்ந்த மித்தசேனன் யார், இவன் எந்த முறையில் அரசாட்சிக்கு உரியவன் என்பது தெரியவில்லை. நிச்சயமாக இவன் அரசுக்கு உரியவனல்லன். ஏனென்றால் இந்த மித்தசேனன் பேர்போன அரிசிக் கொள்ளைக்காரனாக இருந்தவன். இவனை அரசனாக்கிய அமைச்சன் இவனை வெளியில் காட்டாமலே மறைத்து வைத்திருந்தான். அரசன் நோயாக இருக்கிறபடியால் அரண்மனையை விட்டு வெளியே வர இயலாமல் இருக்கிறாள் என்று அமைச்சன் நாட்டு மக்களிடம் கூறினான்.

எத்தனை நாள் ஒளித்திருக்க முடியும்? நாட்டு மக்கள் வற்புறுத்தலின்மேல், மித்தசேனன் திருவிழாக் காலத்தில் யானை ஏறி உலாவந்தான். இவன் ஆட்சிக்காலத்தில், ஓராண்டுக்குப் பிறகு தமிழ் நாட்டிலிருத்து பாண்டிய அரச குலத்துப் பாண்டியன் ஒருவன் படையெடுத்து வந்து மித்தசோனைப் போரில் கொன்று சிங்கள ஆட்சியைக் கைப்பற்றி யரசாளத் தொடங்கினான்.[2]

இலங்கையில் பாண்டியர் ஆட்சி (கி.பி. 436-463)

தமிழகத்தைக் (சேர சோழ பாண்டிய நாடுகளை) களப்பிர அரசர் ஆட்சி செய்த போது பழைய சேர சோழ பாண்டிய அரச பரம்பரையார்


  1. குலவம்சம் 38-ம் பரிசசேதம் 3-4
  2. Ibid 4-11