34 @fr. r.
ஆள் கொஞ்சம் அடங்கினான். ‘மாமா கம்ப ளெயின்ட் கொடுத்தால் கேஸ் எழுதிடலாம்’ என்றான்.
‘இப்போக் கூட அவரைக் கேட்டு செய்யேன்!” அவன் காதில் வாங்கிச் கொள்ளாதது மாதிரி சொல் விக்கொண்டே பேரனான்.
“கேஸ்புக்கிலே பேர் ஏறிட்டால், மாமாவும் ஒண்னும் செய்ய முடியாது, நான் கூட ஒன் னு ம் செய்ய முடியாது” அவன் குரலில் வருத்தம் தெரிந்தது.
“அப்படியா? ஆனால் மாப்பிள்ளே, உன்னை ஒண்ணு கேக்கனும்”
அவன் புருவங்கள் உயர்ந்தனவா? இருட்டு. ‘இந்த எழுதாத கேஸ்மேலேயா, ஏட்டு-ஏட்டு இன்னும் ஆவாதஏட்டு நீ சர்க்கிள் ஆவ ஆசைப்படறே? இது ஏதோ விக்ரமாதித்தனுடைய முறை தெரியாக் கதை, போவாத ஊருக்கு வழி- இதுமாதிரி பழமொழியோடு சேர்ந்துடும் போல இருக்கே!”
இருட்டில் முகபாவங்கள் தெரியவில்லை. ஆனால் அவன் உள்ளே நாடி. நரம்பு, ரேடியோ, மின்சாரம், திசை மானி, தண்டவாளம், சவாரி எல்லாம் அந்த ஒரு கன பூகம்பத்தில் தகர்ந்த வேகம் என் மேலும் தெறித்தது.
ஒரு தந்திக் கம்பம் கூட உள்ளே வேரோடு சாய்ந் ததோ என்னவோ ?
தன் கன்னத்தைத் தடவிக் கொண்டான். கொசு. கடித்ததோ ?
“எல்லாம் மாமன் கொடுத்த இடம்- குரல் மூச்சாகி விட்டது.
‘ஏன், நீ அவரிடம் ஒரு வார்க்கை சொல் oo ஏன், நீ அவரிடம் ஒரு வார்த்தை சொல்றது தானே? “சொல்லாமலா போறேன் ? இல்லை. அவர் தெரிஞ் சுக்காமலா போறார் ? வழியிலே போனவனை இளுத்து