இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
യ്യാഭ്രസ്തു ശ്ലോ
ஈங்கிவற்றின் சூழ்வில்
இருளில் புதையுண்டு தாங்கவொண்ணா வெம்பசியைத்
தாங்கிவரும் ஒர்கூட்டம் என்னதான் செய்யுமிங்கே?
எப்படித்தான் வாழ்ந்துவரும்? தின்னத் திருடுமன்றோ?
தீங்குசெய்ய முந்துமன்றோ?
எல்லார்க்கும் எல்லா
நலமும் இயைவதென்றால், இல்லார்க்கும் கேடில்லை;
ஏய்ப்பார்க்கும் வாய்ப்பில்லை! அந்நாள் வரையிலும்
ஆக்கம்போல் வீழ்விருக்கும்! அந்நாள் வரத்தான்
அறிஞர் முயல்கின்றார்
மக்கள் உலகின்
மனம்வெதும்பும் செய்திகளை
ஒக்க உரைப்பதெனில்
உள்ளம் கொதிப்பேறும்!
ஊரென்றும் நாகரிகம்
ஒங்கும் நகரென்றும்
பேர்கொண்ட தல்லால்
பெருமை துளியுமில்லை!
69
700
705
710