இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
ല്യഗുണ്ടൂ മലന്തൂ
வால்சோர, மெய்சோர
வான்துயரங் கொண்டபடி,
காளை இனிவாழுங்
காலத்தை எண்ணியதே!
'வேளை சரியில்லை;
வீழ்ந்துயிரை மாய்த்திடலும் ஆணுக் கழகில்லை!
அப்படியே மீண்டும்போய் 795 விணுக்கு மாந்தரிடை
வீழ்வதுவோ? சீ சீ சீ!
"ஆனாலும் செய்வதென்ன? ஆடவரே என்றாலும்வானளவு பேராற்றல்
வாய்த்தவரே என்றாலும்துன்னத் துரும்பும்
துணையாகக் கொள்ளாரேல் சின்ன வினையேனும்
செய்தற் கியலாரே! 800
"அந்தோ! கழுதையம்மை
ஆண்பிறவி இல்லெனினும் சிந்தாத நல்லவுள்ளம்!
சீர்குலையா நல்லொழுக்கம்!
"நல்லுளமும் நல்லொழுங்கும்
நற்றுணையாய் வாய்த்துவிடின்
79