இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
ാഠഭൂഗു ു്
நொந்தஉளத் தோடு
கழுதையம்மை நோக்கிற்று! நீண்டு சிலிர்த்து
நிறைந்த பிடரிமயிர்! பூண்ட தொருநீள்வால்:
பூரித்து நின்றமறம்!
திண்ணிய கால்கள்!
திசைகாட்டும் முள்மீசை! கண்ணில் நெருப்புருண்டை!
கால்களிலே கூருகிர்கள்: 930 தாமரை நாத்தொங்க
தாடைவாய்ப் பல்தெரிய மாமல்லன் வீறுடலம்
மண்ணில் கிடப்பதுபோல் ஆணரிமா தன்கால்
அடியில் கிடந்ததனை மாணப் பெருமையென
எண்ணி மதித்தாலும், பெட்டைக் கழுதைக்குப்
பேச்சுமில்லை; மூச்சுமில்லை! 935
வெட்டுண்டு சாய்ந்தாலும்
விறுமிகக் கொண்டவர்முன்
கோழையர்கள் என்றுமிகக்
கோழையரே இவ்வுலகில்!
ஏழையர்முன் செல்வம்
இழந்தவருஞ் செல்வரன்றோ?
93