இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
ാ ശ്ലേ ശ്ലേ.
போனவுடன், பெண்கழுதை
பொங்குணர்வால் காளையிடம்
ஆனகதை முற்றுமாய்
ஆவலொடு கேட்டதுவாம்! 1520
பெண்கழுதை கேட்டிடவும் காளை, பிரிவுமுதல் கண்பட்ட நேரம்வரை
காட்டில் திரிந்ததையும், வேங்கைமுன் தாழ்ந்து,
வரிப்புலியால் விணலைந்து, மூங்கிலடர் காட்டுள்
உடலெல்லாம் முள்பட்டுக்
காட்டாற்று நீரில் -
கழுத்தளவு நீந்திவந்து, 1525
கோட்டானைக் கண்டதையும்,
கொல்கரடிக் கூட்டத்தில்
சிக்கித் தவித்துச் -
சிறுத்தைக்குக் கண்தப்பித்
திக்கித் திணறித் - - - - - திகைத்தலைந்து நொந்ததையும்,
அப்பால் மனந்தேறி,
என்னநிலை ஆனாலும் எப்போதும் போல்நாட்டுக்
கேகிவிடும் எண்ணமுடன், 1530
142