இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
ാദ്രഗു മമ്മൂ
சுற்றுமுற்றும் பார்த்திருந்தேன்!
சூழல் விளங்கியது! 1820
காலையிலே பொங்கலுண்டு காற்றாட வந்ததுவும் சோலைப் புதைகாட்டில்
சோர்வுறவே ஒய்ந்ததுவும், ஆற்றங் கரைக்காற்றில்
அப்படியே கண்மயங்க வீற்றயர்ந்த போதில்,
வெளுப்பார் அவிழ்த்துவிட்ட தாய்க்கழுதை ஒன்றும்
தனிக்குட்டி ஒன்றுமாய் 1825 வாயவிழ்த்துக் கத்தியதும்
வன்புலம்பல் கூறியதும்,
மெல்லமெல்லக் கண்மூட
மேலேஅத் தாய்க்கழுதை சொல்லி யழுதிருந்த
சொற்கள் விளங்கியதும், ஆழ்ந்த உறக்கத்தே
அக்கழுதை கள்,கனவில் வாழ்ந்த வகையெல்லாம்
வந்துற்ற கற்பனையும் 1830 ஒவ்வொன்றாய் எண்ணி
உணர்ந்தேன்; உணர்ந்தவுடன் சிவ்வென் றெழுந்தேன்!
சிலிர்த்தெழுந்த உள்ளுணர்வால்
173