பக்கம்:கழுதை அழுத கதை.pdf/34

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ലാദ്രഗു ജു്

'பார்ப்பார்'என் றோரினத்தைப் பார்த்திருக்க மாட்டாய் நீ! ஊர்ப்பால் வருந்துயரம் எல்லாம் அவரால்தான்! (470-47)

கானாக் கடவுளுக்கே காவலர்யாம்' என்றுரைப்பார்!

தெய்வப் பிறவியென்பார்; தீண்டிவிட்டால் தீட்டென்பார்!

பொய்புளுகு மூட்டைப் புராணங்கள் பாடிடுவார்!

"சாத்திரங்கள் பேசிடுவார்; சாதி குலம்வகுத்தார்;

நாத்திறத்தால் ஏய்ப்பார்; நடிப்பால் பிழைத்திடுவார்!.

- (475-478)

என்பனபோலும் பார்ப்பனரைப்பற்றித் தோலுரித்து வைத்துள்ள வரிகள் -வளரும் நம் தமிழிளங்குமுகம் மறவாது தம் நெஞ்சகத்திற் பதித்துக் கொள்ளவேண்டிப் படைத்துள்ள அரிய வரலாற்றுப் பாடற்பாடப் பகுதிகள் ஆகுவன

உரிமை!...

தமிழ் மொழி - தமிழின - தமிழ்நாட்டு உரிமைகளுக்காகவும் அவற்றின் விடுதலைக்காகவும் முப்பத்தைந்தாண்டுக் காலக் கொள்கை முழக்க அரிமாவாகவும் - அவற்றிற்கான ஈகத்தோடுகூடிய செயலாண்மையராகவுமே நம் ஐயா அவர்கள் வாழ்க்கையை நடத்தியவராகையால் - குழந்தைகளுக் கான, சிறார் சிறுமியர்க்கான கதைப் பாவியம் படைக்கும் இம் முனைப்பு வினைக்குள்ளும் இடையிடையிலாக அவ் வுரிமை விளக்கங்களையும் விடுதலை வேட்கும் வீச்சுக்களையும் இயல்பாக ஊடாட விட்டுள்ளமையையும் நாம் காணுகின்றோம்!

ஆற்றுவெளுப்பாரின் அடக்குமுறைக்கு ஆட்பட்டுக்

“ཤམང་ཤས་B.i.j:; ལམ་གང་མང་་་

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கழுதை_அழுத_கதை.pdf/34&oldid=665362" இலிருந்து மீள்விக்கப்பட்டது