பக்கம்:கழுதை அழுத கதை.pdf/40

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ാണ്ടൂ മാ

6. "சொந்தப் படிப்பெல்லாம் சூழ்ச்சிக்கே தானுதவும்" (194) 7. "பூட்டுக்குப் பொன்திறவு போட்டுத் திறப்பதனால்

கொள்ளை.என் றாகாதோ?..........." (545-546) 8. "வெட்டுண்டு சாய்ந்தாலும் விறுமிகக் கொண்டவர்முன்

கோழையர்கள் என்றும் மிகக் கோழையரே

இவ்வுலகில்" (936-937)

9. "ஏழையர்முன் செல்வம் இழந்தவரும் செல்வரன்றோ?”

(938)

10. 'கல்வியினால் தீமை கழன்றொதுங்க வேண்டாவோ?”

- . (1281)

11. “நல்விதையை ஊன்றினால் நச்சுக் கணிவிளைமோ?"

(1282)

கதைப்பினுள் விதைப்புகள்!.

கதை சொல்லுவதற்கிடையில்-மாந்த நேயவுணர்வு வளர்ப்பு, - கொள்கைக்கென வாழும் சிறப்பு, - அக் கொள்கைக் கடைப்பிடிப்பிடையில் நேரலாகும் துயரங்க ளைப் பற்றிய புறக்கணிப்புப் போக்கு- துன்பத்தில் துவளாது மேற்செல்ல உறுதிபெறுகை -குமுகத்திலுள்ள புன்மை புரைகளை அறிந்து அவற்றை நீக்க முனைவதற் கான எழுச்சியூட்டம், -நம்மைச் சூழ்ந்துள்ள நிலைத் திணைகள், இம் மண்ணுக்கும் மேலாக விண்ணகத்தே பறந்துலவும் புள்ளினங்கள், கான்விலங்குகள் ஆகியவற்றின் பெயர்களைத் தெரிந்துகொள்ளத் தூண்டும் இயற்கை வாழ்வு பற்றிய தெளிவூட்டம், - உரிமை கோரல், - விடுதலை வேட்கை - உவமைப்படுத்திப் பார்த்துத் துய்க்கும் மனவுணர்வுப் பேற்றுக்கான

ميسينس. يت متماس ممدي .

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கழுதை_அழுத_கதை.pdf/40&oldid=665376" இலிருந்து மீள்விக்கப்பட்டது